சென்னை, மே 28- திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்முறைப்படுத்தும் நோக்கில் தென் சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 25.05.2025 அன்று பகல் 2.30 மணிக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் பொன்னேரி வி.பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் பெரியார் திடலில் நடைபெற்றது. தென் சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன் மற்றும் தென் சென்னை மாவட்ட செயலாளர் செ.ர.பார்த்தசாரதி முன்னிலை வகித்தனர்.
திராவிடர் கழக தென் சென்னை மாவட்ட இளைஞரணிச் செயலாளர் பெரியார் யுவராஜ் கடவுள் மறுப்பு கூற கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும் தென் சென்னை மாவட்ட இளைஞரணித் தலைவர் ந.மணிதுரை வரவேற்பு ரையாற்றினார்.
கூட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழகம், திராவிட மகளிர் பாசறை, திராவிடர் கழக இளைஞரணியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.
கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் குறித்து திராவிடர் கழக இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் 11.05.2025 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவது குறித்தும், தலைமை நிலையம் சார்பில் இளைஞரணித் தோழர்கள் மாதந்தோறும் களப்பணி செய்ய வேண்டியதை விளக்கியும் பேசினார்.
தென்சென்னை மாவட்ட இளைஞரணி துணைத் தலைவர் ச.மகேந்திரன், துணைத் தலைவர் இரா.மாரிமுத்து, சைதப்பேட்டைப் பகுதி இளைஞரணிச் செயலாளர் சிகரன், சூளைமேடு கோ.வீ.இராக வன், அரும்பாக்கம் ச.தாமோதரன், சூளைமேடு ந.இராமச்சந்திரன், எம்டிசி பா.இராசேந்திரன், தென்சென்னை மாவட்ட மகளிர் பாசறைத் தலைவர் மு.பவானி ஆகியோர் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். நிறைவாக மாவட்ட இளைஞரணி துணைச் செயலாளர் அன்பு நன்றியுரை கூறினார். கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
ஜூன் – 15 அன்று தென் சென்னையில் மாவட்ட இளைஞ ரணி சார்பாக உண்மை வாசகர் வட்டம் நடத்துவது என்று தீர் மானிக்கப்படுகிறது.
ஜூன் – 22 அன்று தென் சென்னை சைதாப்பேட்டை பகுதியில் இளைஞரணி சார்பாக தெருமுனைப்பிரச்சாரம் நடத்துவதோடு, கழக வெளியீடுகள் பரப்புரையும் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.
தென் சென்னை மாவட்ட இளைஞரணியின் மாதாந் திர கலந்துரையாடல் கூட் டம் ஜூன் 29 ஆம் தேதி ஞாயிற்றுக் கிழமை நடத்துவது என்று தீர்மானிக்கப் படுகிறது.