சட்டம் – ஒழுங்கு குறித்து அதிகாரிகளுடன் காவல்துறை தலைமை இயக்குநர் ஆலோசனை

Viduthalai
1 Min Read

சென்னை, மே 28 தமிழ்நாடு சட்டம் – ஒழுங்கு குறித்து காவல்துறை அதி காரிகளுடன் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் ஆலோசனை மேற்கொண்டார்.

சட்டம் – ஒழுங்கு

பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளதாகவும், போதைப் பொருள் நட மாட்டம் அதிகமாக உள்ள தாகவும், கொலைகள் நடப் பதாகவும், சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டதாகவும் எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.

இந்த விவகாரத்தில் அனைத்து மாவட்ட காவல்துறையினர் அதிக கவனம் செலுத்தி குற்றம் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் அறிவுறுத்தியுள்ளார். அதன் தொடர்ச்சியாக காவல்துறை அதிகாரிகளு டன் தனது அலுவலகத்தில் காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால் நேற்று காலை ஆலோசனை நடத்தினார்.

இக்கூட்டத்தில், சட்டம் ஒழுங்கு கூடுதல் காவல்துறை தலைமை இயக்குநர் டேவிட்சன் தேவாசிர்வாதம் மற்றும் சென்னை, ஆவடி, தாம் பரம் காவல் ஆணையர் அலுவலக அதிகாரிகள் பங்கேற்றனர். மாவட்ட காவல்துறை அதிகாரிகள் காணொலி வாயிலாக பங்கேற்றனர். இந்த ஆலோசனைக் கூட்டத்தில் போதைப் பொருள் ஒழிப்பு, பாலியல் விவகாரம், கொலை, கொள்ளை உள் ளிட்ட பல்வேறு குற்றச் செயல்களை முற்றிலும் தடுப்பது தொடர்பாக விரிவான ஆலோசனை மற்றும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *