அண்ணா பல்கலைக் கழக வளாகத்தில் நடத்தப் பட்ட பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய நபரை குற்றவாளி என்று இன்று (28.5.2025) சென்னை மகளிர் நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை வரவேற்கிறோம்.
நீதி வெல்லுகிறது; ‘மனித மிருகங்களுக்கு’ உரிய தக்க தண்டனையைத் தந்து, பாலியல் குற்றவாளி களுக்குத் தக்க எச்சரிக்கையாக ‘தடுப்பணை‘யாகவும் இத்தீர்ப்பு அமையும் என்று எதிர்பார்க்கலாம்.
ஜூன் 2 ஆம் தேதி, தண்டனை விவரம் தெளிவுபடுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
5 மாதங்களில் விரைந்து விசாரித்து நீதி வழங்கி யது பாராட்டத்தக்கது.
நீதிமன்றத்திற்கும், ஆட்சியாளர்களுக்கும் நமது பாராட்டு!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
28.5.2025