கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 27.5.2025

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

*தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கமல்ஹாசனுக்கு வாய்ப்பு; அதிமுக தனது பலத்தை தக்க வைக்கப் போராடுகிறது.

டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:

* பிரதமர் மோடியின் 11 ஆண்டு ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலை: காங்கிரஸ் கடும் தாக்கு.

*டில்லியில் காங்கிரசார் நடத்திய பிற்படுத்தப்பட் டோர் சங்க கூட்டத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கைக்கு வலு சேர்த்த ராகுலுக்கு பாராட்டு.

தி இந்து:

* துணைவேந்தர்கள் நியமன விவகாரம்:உயர் நீதிமன்றத்திலிருந்து மாற்றக் கோரிய தமிழ்நாட்டின் மனுவை ஜூலை மாதம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்.

* ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்த மோடியின் பழைய காட்சிப்பதிவுகள்: காங். பகிர்ந்து விமர்சனம்.

* உச்ச நீதிமன்றத்திற்கு மூன்று நீதிபதிகளையும், அய்ந்து உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளையும் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.

* 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 9150 மாணவர்கள் பயன் பெறுவார்கள்.

நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* பொது நிகழ்வில் பூந்தொட்டியை பரிசாக கையில் அளிக்காமல், அதிகாரியின் தலையில் வைத்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ‘மனநிலை’ குறித்து ஆர்ஜேடி கேள்வி எழுப்பியுள்ளது.

தி டெலிகிராப்:

* ‘குப்பையை தங்கமாக மாற்றலாம்’ என கூறிய உ.பி. அமைச்சர் சிங்கின் அறிக்கையை கிண்டல் செய்து அகிலேஷ் பேட்டி.

டைம்ஸ் ஆப் இந்தியா:

* முட்டி போட வைத்த நீதிபதி மீது நடவடிக்கை: வழக்குரைஞர்கள் மற்றும் காவல்துறையினரை முட்டி போட செய்யவோ அல்லது மன்னிப்பு கேட்க அவர்களின் காதுகளைத் தொடவோ கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு சிவில் நீதிபதியின் பணிநீக்கத்தை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.

.- குடந்தை கருணா

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *