டெக்கான் கிரானிக்கல், சென்னை:
*தமிழ்நாட்டில் காலியாக உள்ள 6 மாநிலங்களவை எம்.பி. பதவிக்கு ஜூன் 19ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. கமல்ஹாசனுக்கு வாய்ப்பு; அதிமுக தனது பலத்தை தக்க வைக்கப் போராடுகிறது.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* பிரதமர் மோடியின் 11 ஆண்டு ஆட்சியில் அறிவிக்கப்படாத அவசர நிலை: காங்கிரஸ் கடும் தாக்கு.
*டில்லியில் காங்கிரசார் நடத்திய பிற்படுத்தப்பட் டோர் சங்க கூட்டத்தில் ஜாதி வாரி கணக்கெடுப்பு கோரிக்கைக்கு வலு சேர்த்த ராகுலுக்கு பாராட்டு.
தி இந்து:
* துணைவேந்தர்கள் நியமன விவகாரம்:உயர் நீதிமன்றத்திலிருந்து மாற்றக் கோரிய தமிழ்நாட்டின் மனுவை ஜூலை மாதம் விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்.
* ஜாதி வாரி கணக்கெடுப்பு குறித்த மோடியின் பழைய காட்சிப்பதிவுகள்: காங். பகிர்ந்து விமர்சனம்.
* உச்ச நீதிமன்றத்திற்கு மூன்று நீதிபதிகளையும், அய்ந்து உயர்நீதிமன்றங்களுக்கு புதிய தலைமை நீதிபதிகளையும் உச்சநீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்துள்ளது.
* 11 புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 9150 மாணவர்கள் பயன் பெறுவார்கள்.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* பொது நிகழ்வில் பூந்தொட்டியை பரிசாக கையில் அளிக்காமல், அதிகாரியின் தலையில் வைத்த பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் ‘மனநிலை’ குறித்து ஆர்ஜேடி கேள்வி எழுப்பியுள்ளது.
தி டெலிகிராப்:
* ‘குப்பையை தங்கமாக மாற்றலாம்’ என கூறிய உ.பி. அமைச்சர் சிங்கின் அறிக்கையை கிண்டல் செய்து அகிலேஷ் பேட்டி.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* முட்டி போட வைத்த நீதிபதி மீது நடவடிக்கை: வழக்குரைஞர்கள் மற்றும் காவல்துறையினரை முட்டி போட செய்யவோ அல்லது மன்னிப்பு கேட்க அவர்களின் காதுகளைத் தொடவோ கட்டாயப்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்ட ஒரு சிவில் நீதிபதியின் பணிநீக்கத்தை மத்திய பிரதேச உயர்நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
.- குடந்தை கருணா