மணிப்பூர் கலவரம்: சென்னையில் கிறித்துவ நல்லெண்ண இயக்கம் ஆர்ப்பாட்டம்

Viduthalai
1 Min Read

சென்னை, ஜூன் 27- மணிப்பூர் கலவர விவகாரத்தில் ஒன்றிய அரசை கண்டித்து கிறிஸ்துவ நல்லெண்ண இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே நேற்று (26.6.2023) ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அமைப்பின் தலைவர் இனிகோ இருதயராஜ் தலைமை தாங்கினார்.

ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், தி.மு.க. செய்தித் தொடர்பாளர் டி.கே.எஸ்.இளங்கோவன், காங்கிரஸ் கட்சி யின் தேசிய ஒருங்கிணைப்பாளர் சசிகாந்த் செந்தில், விடு தலை சிறுத்தைகள் கட்சி துணை பொதுச்செயலாளர் சட்ட மன்ற உறுப்பினர் எஸ்.எஸ்.பாலாஜி,  மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்டு கட்சி மாநிலக்குழு உறுப்பினர் சின்னதுரை, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாநில துணை செயலாளர் வீரபாண்டியன், ம.தி.மு.க. முதன்மை செயலாளர் துரை வைகோ, மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹி ருல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி துணைத் தலைவர் நவாஸ்கனி, தமிழக வாழ்வுரிமை கட்சி துணை பொதுச்செயலாளர் சத்ரியன் வேணுகோபால், மக்கள் கண்காணிப்பகம் ஒருங்கிணைப் பாளர் ஆசீர், செங்கை மறைமாவட்ட கத்தோலிக்க ஆயர் நீதிநாதன், தென்னிந்திய திருச்சபை பேராயர் ஜார்ஜ் ஸ்டீபன், சென்னை-மயிலை உயர் மறை மாவட்ட மேனாள் பேராயர் சின்னப்பா உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் பேசிய தலைவர்கள், பேராயர்கள் அனைவருமே மணிப்பூரில் மதக் கலவரத்தை பா.ஜ.க. நடத்தி வருவதாகவும், பா.ஜ.க.வுக்கு நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை வழங்கவேண்டும் என்றும் கருத்துகளை முன்வைத்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *