நேர்காணல் இல்லாத தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்! டிஎன்பிஎஸ்சி அழைப்பு

1 Min Read

சென்னை, மே 27- தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கு (நேர்காணல் இல்லாத பதவிகள்) இன்று முதல் இணைய வழியில் (ஆன்லைனில்) விண்ணப்பிக்கலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்) அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி மே 21ஆம் தேதி அன்று வெளியிட்டது. இதில் உதவி பொறியாளர் (சிவில்), உதவி பொறியாளர் (எலெக்ட்ரிக்கல்), இளநிலை மின்ஆய்வாளர், வேளாண் அலுவலர் (விரிவாக்கம்), தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதார உதவி இயக்குநர், மீன்வள ஆய்வாளர், நூலகர் (கிரேடு-2), இளநிலை அறிவியல் அலுவலர், உதவி பிரிவு அலுவலர் (மொழிபெயர்ப்பு), சமூக அலுவலர், உதவி சுற்றுலா அலுவலர் (கிரேடு-1) உள்ளிட்ட 47 விதமான பதவிகளில் 615 காலியிடங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்தத் தேர்வுக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு மே 27ஆம் தேதி தொடங்கி ஜூன் 25ஆம் தேதி முடிவடையும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, ஒருங்கிணைந்த தொழில்நுட்பப் பணிகள் தேர்வுக்கான (நேர்காணல் இல்லாத பதவிகள்) ஆன்லைன் விண்ணப்பப் பதிவு இன்று (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. ஒவ்வொரு பதவிக்கும் ஏற்ப கலை அறிவியல் பட்டதாரிகள், பிஇ, பிடெக் பட்டதாரிகள், குறிப்பிட்ட பாடப்பிரிவுகளில் பட்டம் பெற்றவர்கள் இத்தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

இதற்கான எழுத்துத்தேர்வு ஆகஸ்ட் 4 முதல் 10ஆம் தேதி வரை கணினிவழியிலும், ஓஎம்ஆர் ஷீட் வடிவிலும் நடைபெறும். ஆன்லைனில் விண்ணப்பிக்கும் முறை, பதவிகள் வாரியான காலியிடங்கள், அவற்றுக்கு நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி, வயது வரம்பு, தேர்வுக்கான பாடத்திட்டம் உள்ளிட்ட கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *