மேட்டூர் அணை நீர்மட்டம் 112 அடியாக உயர்வு

viduthalai
0 Min Read

மேட்டூர், மே 27– காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் பெய்துவரும் பலத்த மழையால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேட்டூர் அணைக்கு 25.5.2025 அன்று விநாடிக்கு 2,878 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று (26.5.2025)காலை விநாடிக்கு 3,548 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக விநாடிக்கு 1,000 கனஅடி நீர் திறந்து விடப்படுகிறது. 25.5.2025 அன்று 111.60 அடியாக இருந்த அணையின் நீர்மட்டம் நேற்று (26.5.2025) காலை 111.73 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் 80.89 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *