உச்ச நீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகள் பெயர் பரிந்துரை

viduthalai
2 Min Read

உச்ச நீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகளை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி கவாய் தலைமையிலான கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. கருநாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அன்ஜாரியா, கவுகாத்தி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பிஸ்னோய், மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி சந்துர்கர் ஆகியோர் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்கப் பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்

ஊசி தேவையில்லை! நொடிகளில் ரத்த பரிசோதனை

தமிழ்நாடு

ரத்த பரிசோதனை செய்ய இனிமேல் ஊசியைக் குத்தி ரத்தத்தை எடுக்க வேண்டிய தேவையில்லை மக்களே. ஏ.அய். தொழில்நுட்ப உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள செயலியில், வெளிச்சமான அறையில் முகத்தை ஸ்கேன் செய்தால் மட்டும் போதும். சர்க்கரை, பி.பி, ஹிமோகுளோபின் உள்ளிட்ட அனைத்தின் அளவுகளையும் 20 நொடிகளில் துல்லியமாக நம்மால் பார்க்க முடியும். இதனால் உடலில் ஏற்படும் மாற்றங்களை உடனடியாக கண்டுபிடித்து சிகிச்சை பெறலாம்.

ஊதிய உயர்வு.. பேச்சுவார்த்தை நடத்த அரசு அழைப்பு

அரசு போக்குவரத்து ஊழியர்களுக்கான ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை மே 29இல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக ஊழியர்களுக்கான 14ஆவது ஊதிய ஒப்பந்தம் 2023 ஆகஸ்டுடன் நிறைவடைந்தது. 15ஆவது ஊதிய ஒப்பந்தத்தை இறுதி செய்வதில் இழுபறி நீடித்து வருகிறது. இந்நிலையில், ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த தொழிற்சங்கங்களுக்கு அரசு அழைப்பு விடுத்துள்ளது.

குட்கா, பான் மசாலாவுக்கு தடை நீட்டிப்பு

தமிழ்நாட்டில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு விதிக்கப்பட்ட தடையை தமிழ்நாடு அரசு மேலும் ஓராண்டு நீட்டிக்கப்பட்டுள்ளது. 2026 மே 23ஆம் தேதி வரை தடை நீட்டிக்கப்படும் என அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 2013 முதல் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கவும் விற்பனை செய்யவும் தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

சிறந்த அரசு பள்ளிகளின் விவரம்… புதிய உத்தரவு!

மாவட்ட அளவில் சிறந்த 3 அரசுப் பள்ளிகளை தேர்வு செய்து விவரங்களை வழங்குமாறு மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது. சிறப்பான பள்ளிகளை பாராட்டி சுழற்கேடயம் வழங்கும் வகையில் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. விவரங்களை வழங்க முதலில் குழு அமைக்கப்பட்டு பள்ளிகளில் ஆய்வு செய்து அதிகாரிகள் மதிப்பெண் வழங்குவர். அதன் அடிப்படையில் தேர்வு செய்யப்படும்.

சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையம்

தமிழ்நாடு

சென்னைக்கு தனி பேரிடர் மேலாண்மை ஆணையத்தை உருவாக்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. பருவமழை காலங்களின்போது சென்னையின் பல்வேறு பகுதிகள் பாதிக்கப்படுகின்றன. இதனால் மக்களுக்கு உதவும் நோக்கில் தனி பேரிடர் ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது. மாவட்ட ஆட்சியர், காவல் ஆணையர், சென்னை மாநகராட்சி நல அலுவலர் என உயரதிகாரிகள் அடங்கிய ஆணையமாக செயல்படும்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *