பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் நீர்வளத்துறை அதிகாரிகள் தகவல்

Viduthalai
2 Min Read

சென்னை, மே. 26- கண்டலேறு அணையி லிருந்து பூண்டி ஏரிக்கு கூடுதல் தண்ணீர் திறந்து விட முடிவு செய்துள்ளதாக தமிழ்நாடு நீர்வளத் துறை அதிகாரிகள் கூறினர்.

சென்னை மாநகரின் குடி நீர் தேவைக்காக ஆந்திரா மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா நதிநீர் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஆண்டு தோறும் 12 டி.எம்.சி. நீர் வழங்க வேண்டும். நடப்பாண்டுக்கான 2ஆம் தவணை நீர் கடந்த மார்ச் மாதம் 24ஆம் தேதி திறக்கப்பட்டது.

கடந்த மாதம் 24ஆம்தேதி கால்வாய் பராமரிப்பு பணிக்காக கிருஷ்ணா நதிநீர் நிறுத்தப்பட்டது. இந்த பணிகள் நிறைவடைந்த நிலையில் மீண்டும் கிருஷ்ணா நதிநீர் திறக்கப்பட்டு, பூண்டி ஏரிக்கு கடந்த 22ஆம் தேதி முதல் நீர் வந்து கொண்டிருக்கிறது.

இதுகுறித்து தமிழ்நாடு நீர்வளத் துறை அதிகாரிகள் கூறியதாவது:- கிருஷ்ணா நதியில் தண் ணீர் மிதமான வேகத்தில் வந்து கொண்டிருக்கிறது. சராசரியாக 320 முதல் 350 கன அடி நீர்தான் முதலில் வருவது வழக்கம். ஆனால் தற் போது 220 கன அடிவீதம் தான் நீர் வருகிறது. இதுபோதுமானதாக இருக்காது என்பதால் ஜீரோ பாயிண்டுக்கு 500 கன அடி வீதம் கிடைக்கும் வகையில் நீர் திறக்க வேண் டும் என்று ஆந்திர மாநில நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த 22ஆம் தேதி முதல் நீர் வந்து கொண்டிருக்கிறது.

தொடக்கத்தில் விநாடிக்கு 500 கன அடி வீதம் திறக்கப்பட்ட கிருஷ்ணா நதி நீரின் அளவு படிப்படி யாக அதிக ரிக்கப்பட்டு, கடந்த 19ஆம் தேதி விநாடிக்கு 2,500 கன அடி யாக அதிகரிக்கப்பட்டுள்ளது. நீர் வினி யோகத்தின் அடிப்படை யில், கூடுதல் நீரை திறந்துவிட ஆந்திர மாநில அதிகாரிகளும் உறுதி அளித்துள்ளனர்.

சென்னை மாநகர பகுதிக ளுக்கு குடிநீர் வழங்கும் ஏரி களில் 8 டி.எம்.சி. இருப்பு உள்ளது. நாளொன்றுக்கு 1,087 மில்லியன் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்படு கிறது. பூண்டி ஏரியின் மொத்த கொள்ளளவு 3.231 டி.எம்.சி. தற்போது 1.422 டி.எம்.சி. கொள்ளளவு நீர் இருப்பு உள் ளது. இது மொத்த இருப்பில் 44 சதவீதம் ஆகும். இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *