சென்னை, மே. 26- மாவட்டந்தோறும் சிறு பான்மையினர் கடனுதவி திட்டங்களில் பயன்பெற தகுதியானவர்கள் விண் ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
கடனுதவி திட்டங்கள்
தமிழ்நாடு சிறுபான் மையினர் பொருளாதார மேம்பாட்டு கழகம் மூலம் பொருளாதாரத்தில் பின் தங்கிய சிறு பான்மையின மக்களுக்கு தனிந பர் கடன், கைவினைக்கலைஞர்கள் கடன், சுய உதவிக்குழுக் களுக்கான சிறுதொழில் கடன், மாணவ-மாணவி களுக்கான கல்விக்கடன் உள்ளிட்ட பல்வேறு கடன் உதவி திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தனிநபர் கடன் திட்டத்தில் ஆண்டுக்கு 6 சதவீத வட்டியில் ரூ. 20 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. இதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.3லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண் டும்.
தனிநபருக்கான மற்றொரு கடன் திட்டத்தில் ஆண்களுக்கு 8 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 6 சதவீத வட்டி யிலும் ரூ.30 லட்சம்வரைகடன் வழங்கப்படுகிறது. அதற்கு குடும்ப ஆண்டு வருமானம் ரூ.8 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
சுய உதவிக்குழு கடன்
கைவினை கலைஞர் களுக்கான கடன் திட்டத் தில் ஆண்களுக்கு 5 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 4 சதவீத வட்டி யிலும் ரூ.10 லட்சம் வரை கடன் கொடுக்கப்படுகிறது.
கைவினை கலைஞர் களுக்கான மற்றொரு கடன் திட்டத்தில் ஆண்களுக்கு 6 சதவீதம் வட்டியிலும், பெண்களுக்கு 5 சதவீத வட்டியிலும் ரூ.10 லட்சம் வரை கடன் பெறலாம்.
சுயஉதவிக்குழுவின ருக்கான கடன் திட்டத் தில் 7சதவீத வட்டியில் ரூ.1 லட்சம் வரை கடன் வழங்கப்படுகிறது. மற்றொரு திட்டத்தில் சுயஉதவிக்குழுவை சேர்ந்த ஆண்களுக்கு 10 சதவீத வட்டியிலும், பெண்களுக்கு 8 சதவீத வட்டியிலும் ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் வரை கடனுதவி வழங்கப்படும்.
விண்ணப்பம் அளிக்கலாம்
இதுதவிர தொழிற் கல்வி, வேலை வாய்ப்பு சார்ந்த பட்டப் படிப்பு களை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 3 சத வீத வட்டியில் ரூ.20 லட்சம் வரையும், வெளி நாடுகளில் தொழிற் கல்வி, வேலைவாய்ப்பு சார்ந்த பட்டப்படிப்பு படிப் பவர்களுக்கு ரூ.30 லட்சம் வரையும் கல்விக் கடன் வழங்கப்பட உள்ளது.
மற்றொரு திட்டத்தில், மாணவர்களுக்கு 8 சதவீத வட்டியிலும், மாணவிகளுக்கு 5 சதவீத வட்டியிலும் ரூ.20 லட்சம் வரையும், வெளிநாடுகளில் கல்வி பயில்வோருக்கு ரூ.30 லட்சம் வரையும் கல்விக்கடன் வழங்கப்படு கிறது.
சிறுபான்மையின சமூகத்தைச் சேர்ந்த தகுதியானவர்கள் மற்றும் மாணவ-மாணவிகள் இந்த கடன் உதவியை பெற அந்தந்த மாவட்டங்களில் செயல்படும் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம் என்றும், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து உரிய சான்றுகளுடன் அனுப்பும்பட்சத்தில் விண்ணப்பங்களை பரிசீலித்து கடன் உதவி வழங்கப்படும்’ என சிறுபான்மையினர் நலத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.