பெண்கள் புற்றுநோய் பரிசோதனை செய்து கொள்வது அவசியம் பொது சுகாதாரத்துறை அறிவுறுத்தல்

viduthalai
1 Min Read

சென்னை, மே. 26- அனைத்து பெண்களும் புற்றுநோய் பரிசோ தனை செய்துகொள்வது அவசியம் என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வவிநாயகம் அறி வுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து செல்வவிநாயகம் அவர் பேசியதாவது:-

புற்றுநோய் பாதிப்பு

சமீபகாலங்களாக புற்று நோயால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வரு கிறது. அதுமட்டுமில்லா மல் புற்றுநோயை முற்றிய நிலையில் மட்டுமே கண்டுபிடிக்கக்கூடிய நிலை உள்ளது. இதனால், பாதிப்புகளும் அதிகமாகவே உள்ளது. எனவே, தமிழ்நாடு அரசு முன் கூட்டியே புற்றுநோய் பாதிப்புகளை கண்டறி வதற்கான நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது. கடந்த காலங்களில் பொதுமக்கள் மருத்துவமனைக்கு வரும்போது அவர்களுக்கு பரிசோதனைகள் செய்யப்பட்டு வந்தது.

இந்த நிலையில், 4 மாவட் டங்களில் தொடக்க நிலையில் சோதனை என்ற அடிப்படையில் புற்றுநோய் பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. இது நல்ல முடிவுகளை தந்துள்ளது. அடுத்த கட்டமாக இந்த திட்டத்தை கோவை, காஞ்சிபுரம், திருச்சி, வேலூர், மதுரை உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு அதை விரிவுபடுத்தியுள்ளோம்.

பரிசோதனை அவசியம்

களப்பணியாளர்கள் ஒவ்வொரு பகுதியில் உள்ள மக்களை கணக் கெடுத்து அவர்களை அருகில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் அல்லது துணை சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்து கொள்ள அறிவுறுத்தி வருகிறார்கள். செவிலி யர்களுக்கு இதற்கு தனியாக பயிற்சி அளிக்கப்படுகிறது. முதல்கட்டமாக வாய்ப்புற்றுநோய், கருப்பை வாய் புற்றுநோய், மார்பக புற்றுநோய் ஆகியவை மீது மட்டுமே நாம் தற்போது கவனம் செலுத்தி வருகிறோம். இந்த 3 வகையான புற்றுநோயால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை தான் அதிகளவில் உள்ளது.

18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வாய் புற்றுநோயும், 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு மார்பகம் மற்றும் கருப்பை வாய் புற்றுநோய் பரிசோதனையும் செய்யப்படுகிறது. புற்றுநோயை முன் கூட்டியே கண்டு பிடித்துவிட்டால் அதை முழுமையாக குணப்படுத்த முடியும். எனவே, அனைத்து பெண்களும் புற்றுநோய் பரிசோதனை செய்துகொள்வது அவசியம். இதுகுறித்து எந்த அச்சமும் தேவையில்லை. புற்று நோய்சிகிச்சைகள் இலவசமாகவே வழங்கப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *