சென்னை, மே 26- கழக மாநில இளைஞரணி கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை செயல்முறைப் படுத்தும் நோக்கில் வட சென்னை மாவட்ட திராவிடர் கழகம் மற்றும் கழக இளைஞரணி கலந்துரையாடல் கூட்டம் 24.05.2025 சனிக்கிழமை மாலை 7 மணிக்கு தலைமைச் செயற்குழு உறுப்பினர் தே.செ.கோபால் தலைமையில் கொடுங்கையூரில் உள்ள அவருடைய இல்லத்தில் நடைபெற்றது.
திராவிட மாணவர் கழகத்தைச் சேர்ந்த கோ.அன்பரசன் கடவுள் மறுப்பு கூற கூட்டம் தொடங்கியது. கூட்டத்திற்கு முன்னிலை ஏற்ற வட சென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன் வருகை தந்த அனைவரையும் வரவேற்று, கழகத்தின் தேவை குறித்தும், ஆசிரியரின் பங்களிப்பு, நீதிமன்ற போக்குகள் குறித்தும், தற்போதைய சட்டப் போராட்டங்களில் திராவிடர் கழகத்தின் பணிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.மேலும் திருச்சியில் அமையவிருக்கும் ‘பெரியார் உலக’ பணிகளில் வடசென்னை மாவட்ட கழகமும் பங்களிக்கும் வகையில் மாதம் தோறும் பெரியார் உலக நிதி வழங்கிடுவோம் என்றும் கூறினார்.
கூட்டத்தில் பங்கேற்ற திராவிடர் கழகம், பகுத்தறிவாளர் கழகம், திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட மாணவர் கழகத்தைச் சேர்ந்த பொறுப்பாளர்கள் மற்றும் தோழர்கள் தங்களது கருத்துகளை எடுத்துரைத்தனர்.
கலந்துரையாடல் கூட்டத்தின் நோக்கம் குறித்து திராவிடர் கழக இளைஞரணியின் மாநில துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ் 11.05.2025 அன்று பெரியார் திடலில் நடைபெற்ற திராவிடர் கழக மாநில இளை ஞரணி கலந்துரையாடல் கூட் டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்றுவது குறித்தும், தலைமை நிலையம் சார்பில் இளைஞரணித் தோழர் கள் மாதந்தோறும் களப்பணி செய்ய வேண்டியதை விளக்கியும் பேசினார்.
வட சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.சண்முகநாதன், வட சென்னை மாவட்ட மேனாள் தலைவர் ஜி.தங்கமணி, வட சென்னை மாவட்ட துணைத் தலைவர் நா.பார்த்திபன், திராவிட மகளிர் பாசறைச் செயலாளர் த.மரகதமணி, திராவிட மாணவர் கழக வட சென்னை மாவட்ட தலைவர் ச.சஞ்சய், செம்பியம் ப.கோபாலகிருஷ்ணன், கொளத்தூர் ச.இராஜேந்திரன், அயன்புரம் சு.துரைராசு, வியாசர்பாடி க.செல்லப்பன், தங்க.தனலெட்சுமி, கொடுங்கையூர் வி.இரவிக்குமார், பெரம்பூர் வே.சோதி, க.கவிதா ஆகியோர் கலந்துரையாடல் கூட்டத்தில் கலந்து கொண்டனர். கூட்டத்தின் நிறைவில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.
தலைமைச் செயற்குழு, திராவிடர் கழக இளைஞரணி, திராவிடர் கழக மகளிரணி, திராவிட மகளிர் பாசறை, திராவிட மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங் களை நிறைவேற்றுவதென தீர் மானிக்கப்படுகிறது.
ஜூன் – 14 அன்று வட சென்னை மாவட்டம் கொளத் தூர் பகுதியில் மாவட்ட இளை ஞரணி சார்பாக உண்மை வாசகர் வட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.
ஜூன் – 21 அன்று வட சென்னை வி.வி.நகர் பகுதியில் இளைஞரணி சார்பாக தெருமுனைப்பிரச்சாரம் நடத்துவதோடு, கழக வெளியீடுகள் பரப்புரையும் மேற்கொள்வது என்று தீர்மானிக்கப்படுகிறது.
மாதாந்திர கலந்துரையாடல் கூட்டம் ஜூன் 28 ஆம் தேதி சனிக்கிழமை நடத்துவது என்று தீர்மானிக்கப்படுகிறது.