சென்னை, மே 26 திராவிட மாடல் அரசு செயல்படுத்தி வரும் சிறப்பான திட்டங்களால் திருநங்கையர் வாழ்வில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. திருநங்கையர்களுக்காக நலவாரியம், சிறப்பு விருது, சுயதொழில் மானியம், கல்விக் கனவு திட்டம், முதலிய சிறப்பான திட்டங்களால் வாழ்வில் முன்னேறி வருவதாக தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:
நலத் திட்ட உதவி
முத்தமிழறிஞர் கலைஞர் அர வாணிகளும் இந்தச் சமுதாயத்தின் அங்கம் என்பதால் அவர்களின் நலனை உறுதி செய்வதற்காக, “தமிழ்நாடு அரவாணிகள் நல வாரியம்” 15.4.2008 அன்று தொடங்கப்பட்டு, அரவாணிகளின் வாழ்க்கைத் தரத்தினை உயர்த்தும் வகையில் அவர்களுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகளைக் வழங்கினார். அத்துடன் அரவாணிகள் என்னும் பெயரை திருநங்கையர் எனவும் மாற்றி அறிவித்தார். அதன் பிறகு அரவாணிகள் நலவாரியம் திருநங்கையர் நலவாரியம் என வழங்கப்படுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருநங்கையர் நலவாரியத்தினை 15 அலுவல்சார் உறுப்பினர்கள் (Official Members), 13(10 திருநங்கைகள்,
1 திருநம்பி. 1 இடைபாலினர் மேலும் 1 பெண் உறுப்பினர்) அலுவல் சாரா உறுப்பினர்களுடன் (Non Official Members) 2025-ஆம் ஆண்டில் திருத்தியமைத்தார்.
திருநங்கைகள் நலவாரியத்தின் வாயிலாக அடையாள அட்டை, குடும்ப அட்டை, வீட்டு மனைப்பட்டா, மருத்துவ காப்பீட்டு அட்டை, தையல் இயந்திரம், சொந்த தொழில் தொடங்கிட மானியம், சுய உதவிக்குழுக்கள் அமைத்துப் பயிற்சி அளித்தல், 40 வயதிற்கு மேற்பட்ட ஏழ்மை நிலையில் உள்ள ஆதரவற்ற திருநங்கைகளுக்கு ஓய்வூதியத் தொகை வழங்குதல் போன்ற பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன.
திருநங்கைகளுக்கான ஓய்வூதியம்
வாழ்வாதாரச் செலவுகளுக்கு வருமானம் ஈட்ட இயலாத 40 வயதிற்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழ்மை நிலை யிலுள்ள திருநங்கைகளுக்கு மாதந் தோறும் ரூ.1,000 ஓய்வூதியமாக வழங்கப்பட்டு வந்தது. அந்த ஓய்வூ தியத் தொகையினை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.1,500 ஆக உயர்த்தி உத்தரவிட்டார். இத்திட்டத்தின் கீழ். 2022-2023 ஆம் நிதியாண்டிற்கு 1,311 திருநங்கைகளுக்கு ஓய்வூதியமாக ரூ.1.53 கோடியும், 2023-2024 ஆம் நிதியாண்டில் 1,482 திருநங்கைகளுக்கு 5.2.49 கோடியும் வழங்கப்பட்டுள்ளது.
1,760 திருநங்கைகள் பயன்பெற்று வருகின்றனர்
2024-2025 ஆம் நிதியாண்டிற்கு ரூ.2.70 கோடி நிதி ஒதுக்கீடு செய்து 1,599 திருநங்கைகளுக்கு 2025 மார்ச் மாதம் வரை ரூ.281.76 இலட்சம் வழங்கப்பட்டுள்ளது. 2025-2026 ஆம் நிதியாண்டிற்கு 5.3.00 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதில் 1,760 திருநங்கைகள் பயன்பெற்று வருகின்றனர்.
அந்த வகையில், மனித நேயத்துடன் சுயதொழில் தொடங்கு தல் முதலான ‘திராவிட மாடல்’ அரசின் பல்வேறு திட்டங்களால் திருநங்கையர் பெருமளவில் பயனடைகிறார்கள்.