வஞ்சிக்கும் ஒன்றிய அரசு மம்தா குற்றச்சாட்டு

1 Min Read

கொல்கத்தா, ஜூன் 27 மேற்கு வங்காள மாநிலம் கூச் பிகாரில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பஞ்சாயத்து தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் நேற்று (26.6.2023) நடை பெற்றது.

அதில் அக்கட்சித் தலைவரும், மேற்கு வங்காள முதலமைச்சருமான மம்தா பேசிய தாவது:- மேற்கு வங்காளத்தின் மீதான அக் கறையின்மை காரணமாக, நமக்கு வழங்க வேண்டிய நிதியை ஒன்றிய அரசு வழங்காமல், மாநில மக்களை மிகுந்த சிரமத்துக்கு உள்ளாக் குகிறது. பா.ஜ.க.வின் பழிவாங்கும் அரசியல், மேற்கு வங்காள மக்களின் வாழ்வைப் பாதிக் கிறது.

அவர்கள் தங்களின் ஒடுக்குமுறை உத்தி களால் எங்களின் உத்வேகத்தை தடுத்துவிட முடியாது. நமக்கு உரிய நிதியைப் பெறாமல் நாங்கள் பின்வாங்க மாட்டோம். நமது மக் களுக்கு நீதி கிடைக்கும் வரை, கொடுங்கோல் சக்திகளுக்கு எதிராக தொடர்ந்து போராடு வோம். பா.ஜ.க.வின் உண்மையான முகத்தை வெளிப்படுத்தி, வருகிற பஞ்சாயத்து தேர்தலில் மட்டுமல்லாமல், அடுத்த ஆண்டு நடக்கும் மக்களவைத் தேர்தலிலும் அவர்களைத் தோற்கடிப்போம். ஒன்றிய பா.ஜ.க.வுக்கு எதி ராக ஒரு மகா கூட்டணியை உருவாக்குவதற்கு நாங்கள் முயன்று வருகிறோம். ஆனால் மேற்கு வங்காளத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியும், காங்கிரசும் பா.ஜ.க.வுடன் இணைந்து செயல்படுகின்றன. இந்த மோசமான உறவை நான் முறியடிப்பேன்.’ இவ்வாறு மம்தா  பேசினார்.

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *