காமயகவுண்டன்பட்டி, மே 25- கம்பம் மாவட்டம் காமயகவுண்டன்பட்டியில் ஆர்.வி.ஸ் மஹாலில் இன்று (25-05-2025) காலை 9.30 மணியளவில் திராவிடர் கழகம் சார்பில் 54ஆவது பெரியாரியல் பயிற்சிப் பட்டறை எழுச்சியுடன் நடைபெற்றது.
மாவட்ட செயலாளர் ப.செந்தில்குமார், வரவேற்று உரையாற்றினார். மாவட்ட தலைவர் வெ.தமிழ்செல்வன், நிகழ்ச்சிக்கு தலைமையேற்று உரையாற்றினார். மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன். தொடக்க உரையாற்றி தொடங்கி வைத்தார்.
மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, மாவட்ட காப்பாளர் கருஞ்சட்டை நடராஜன், மாவட்ட துணைத் தலைவர் கா.சிவா. மாவட்ட துணை செயலாளர் பா.முகிலன். மாவட்ட ப.க.தலைவர் டி.பி.எஸ்.ஆர்..அரிகரன், பொதுக்குழு உறுப்பினர் வி. பாஸ்கரன, தேனி மாவட்ட செயலாளர் பூ.மணிகண்டன், மாநில இளைஞரணி துணை செயலாளர் மு.முத்தமிழன், விளையாட்டு அணி மாநில செயலாளர் ம.பூவரசன், கூடலூர் நகர செயலாளர் .வி.நாகராஜன், மாவட்ட மகளிர் பாசறை சுமிலாசிவா, காமயகவுண்டன்பட்டி நகர செயலாளர் ப.அழகேசன், மாவட்ட துணை செயலாளர் கே.பி.நாகராஜ். கம்பம் ஒன்றிய தலைவர் ச.வனராஜ், கே.கே. பட்டி நகரத் தலைவர் சி.முருகன் சுருளிப்பட்டி நகர செயலாளர் பி.ஆண்டிசாமி, கம்பம் ஒன்றிய செயலாளர் ஓ.மகேந்திரன், கே.ஜி.பட்டி நகர செயலாளர் எஸ்.செல்வம், என்.டி பட்டி நகர செயலாளர் சி..மணிகண்டன், நகர துணை செயலாளர் காமயகவுண்டன் பட்டி.குமரேசன், மாவட்ட இளைஞரணி செயலாளர் மா.சுரேஷ், ஆகியோர் முன்னிலை வகித்து உரையாற்றினர். தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு என்ற தலைப்பில் மா.அழகிரி சாமி முதல் வகுப்பு எடுத்தார்.
சமூக நீதி வரலாறு என்ற தலைப்பில் முனைவர் வா.நேருவும், பேய் ஆடுதல். சாமி ஆடுதல் என்னும் அறிவியல் விளக்கம் என்ற தலைப்பில் மருத்துவர் இரா.கவுதமனும், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் சாதனைகள் என்ற தலைப்பில் கழக துணை பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியாரும், தந்தை பெரியாரின் பெண்ணுரிமைச் சிந்தனைகள் என்ற தலைப்பில் கழகத் துணைப் பொதுச் செயலாளர் வழக்குரைஞர் சே.மெ.மதிவதனியும், மந்திரமா? தந்திரமா? அறிவியல் விளக்கம் என்ற தலைப்பில் ஈட்டி கணேசனும், பார்ப்பன பண்பாட்டு படையெடுப்பு என்ற தலைப்பில் முனைவர் அதிரடி க.அன்பழகனும் தொடர்ந்து வகுப்பு எடுத்தார்..
தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை காணொலி வாயிலாக ஒளிப்பரப்பபட்டது.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர் இரா.ஜெயக்குமார் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறார்.