புதுச்சேரி மே 23 நாட்டின் தலைநகர் டில்லியில் காவிரி நீர் மேலாண்மை ஆணைய கூட்டம் நேற்று நடைபெற்றது. மேலாண்மை ஆணைய தலைவர் ஹால்தர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு திறந்துவிட வேண்டிய நீர் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது. அப்போது, உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி காவிரியில் இருந்து தமிழ்நாட்டிற்கு 40 டிஎம்சி நீர் திறக்க கருநாடகாவிற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.