வேத படிப்பின் மீது வெறுப்போ? ஏழு சிறுவர்கள் தப்பி ஓடினர்

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெரம்பூர், மே 23- சென்னை மடிப்பாக்கம் மகாலட்சுமி நகரில் அய்யங்கார் மடம் வேத பாடசாலை செயல்பட்டு வருகிறது. இங்கு தங்கி வேதம் படிக்கும் சிறுவர்கள் 7 பேர் திடீரென காணாமல் போனதாக வேத பாடசாலை நிர்வாகம் சார்பில் மடிப்பாக்கம் காவல்துறையில் புகார் செய்தனர். அதன்பேரில் அனைத்துக் காவல் நிலையங்களுக்கும், ரயில்வே காவல்துறைக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டு சிறுவர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் பெரம்பூர் ரயில்வே காவல்துறை உதவி ஆய்வாளர் ரேணுகா தலைமையிலான காவலர்கள் பெரம்பூர் ரயில் நிலைய நடைமேடையில் சந்தேகப்படும்படியாக நின்ற 7 சிறுவர்களை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர்கள், மடிப்பாக்கத்தில் உள்ள வேத பாடசாலையில் தங்கி, வேதம் படிக்கும் சிறுவர்கள் என்பதும், அங்கிருந்து தப்பி வந்ததும் தெரிந்தது. 7 சிறுவர்களை யும் மீட்ட ரயில்வே காவல்துறையினர் பத்திரமாக அவர்களை மடிப்பாக்கம் காவல் நிலையத்தில் கவால்துறையினரிடம் ஒப்படைத்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *