Viduthalai Daily NewspaperViduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Notification Show More
Font ResizerAa
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Reading: முதலமைச்சருக்கும், அமைச்சர் நேருவுக்கும் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள், வாழ்த்துகள்! சாதனைக்கு மறுபெயர் ‘‘திராவிட மாடல்’’ ஆட்சியே!
Share
Font ResizerAa
Viduthalai Daily NewspaperViduthalai Daily Newspaper
Search
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Follow US
ஆசிரியர் அறிக்கை

முதலமைச்சருக்கும், அமைச்சர் நேருவுக்கும் நமது நெஞ்சம் நிறைந்த பாராட்டுகள், வாழ்த்துகள்! சாதனைக்கு மறுபெயர் ‘‘திராவிட மாடல்’’ ஆட்சியே!

Last updated: May 23, 2025 2:47 pm
Published May 23, 2025
ஆசிரியர் அறிக்கை
SHARE
Contents
தந்தை பெரியாரின் விருப்ப நகரம் திருச்சி!ஆற்றல்மிக்க அமைச்சர் கே.என்.நேருநேரில் கண்டோம், மகிழ்ந்தோம் – முதலமைச்சரையும், அமைச்சர் நேருவையும் பாராட்டுகிறோம்!கண்டோம், மகிழ்ந்தோம் – முதல மைச்சரையும், அமைச்சர் கே.என்.நேரு அவர்களையும் பாராட்டுகிறோம்!சாதனை ஆட்சிக்குப் பெயர்தான் ‘‘திராவிட மாடல்’’ ஆட்சி!

திருச்சி பஞ்சப்பூரில் தந்தை பெரியார் பெயரில் அங்காடி!
பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகள் திறப்பு!
நேரில் கண்டோம், மகிழ்ந்தோம்!

திருச்சி அருகே பஞ்சப்பூர் பகுதியில் தந்தை பெரியார் பெயரில் அங்காடிக்கு அடிக்கல் நாட்டி, அதில் பெரியார், அண்ணா, கலைஞர் சிலைகளையும் நிறுவி, உலகத்தரம் வாய்ந்த அங்காடியாக உருவாக்கியிருப்பதற்கு முதலமைச்சரையும், அமைச்சர் நேருவையும் பாராட்டி, வாழ்த்தி திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

ஆசிரியர் அறிக்கை

தந்தை பெரியார் அவர்கள், தமிழ்நாட்டின் நடுநாயக நகரான திருச்சி யில் இயக்கத்திற்கென்று ஒரு தனி இடத்தை 1950 இல் வாங்கி, அதையே தனது தலைமையகம்போல் வைத்து, பிரச்சாரத்திற்கு அங்கிருந்தே சென்று திரும்பும் முறையைத் தனது பொது வாழ்க்கை முறையாக ஆக்கிக் கொண்டார்!

Also read

ஆசிரியர் அறிக்கை
திராவிடப் பண்பாட்டை மீட்டெடுக்க விரைவில் போராட்ட அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு நிலைப்பாட்டுக்குச் சரியான வெற்றி இது!

அதுமட்டுமல்லாமல், தந்தை பெரியார் அவர்கள், தாம் தொடங்கிய ஆரம்பக் கல்விப் பள்ளி, உயர்நிலைப்பள்ளி ஆசிரியப் பயிற்சிப் பள்ளிகள் முதலியன மட்டுமல்லாது, தமிழ்நாடு அரசே கல்லூ ரியை நடத்திட  அய்ந்தரை லட்சம் ரூபாய் நன்கொடையை 1966 ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பக்தவத்சலம் முதலமைச்சராக இருந்தபோது அவரிடம் அளித்து, திருச்சியில்  கல்லூரியை தொடங்கிடக் காரணமானார் தந்தை பெரியார்!

தந்தை பெரியாரின் விருப்ப நகரம் திருச்சி!

பல்லாயிரக்கணக்கில் கல்வி மறுக்கப்பட்ட சமூக மாணவர்கள் அக்கல்லூரியில் படித்துப் பட்டதாரிகளாகி, பார் போற்றும் நாடாளுமன்றவாதிகளாகவும், மேலாண்மையாளர்களாகவும், பல்வேறு உயர் பொறுப்பாளர்களாகவும் வந்துள்ள னர்.

அத்திருச்சிதான் தந்தை பெரியாருக்கு அவர் வாழ்ந்த காலத்திலேயே கட்சி சார்பற்ற நகர மக்கள் குழு சார்பாக முழு உருவச் சிலை அமைத்துப் பெருமை பெற்றது! (17.9.1967)

ஈரோடு நகர் மன்றத் தலைவர் பொறுப்பு என்பது அவரது அரசியல் தொடக்கமானாலும்கூட, திருச்சியையே அவர் மிகவும் பெரிதும் தனது விருப்ப உரிமை நகராக ஆக்கிக் கொண்டார்.

ஆசிரியர் அறிக்கை

எந்தக் கட்சி அரசாக இருந்தாலும், திருச்சியில் முக்கிய அதிகாரிகள் நிய மனம், திருச்சி நகரின் வளர்ச்சியில் தனிக் கவனமும், அக்கறையும் தந்தை பெரியா ருக்கு உண்டு.

‘‘திருச்சியில்  பெரியார் – மணியம்மை குழந்தைகள் நல விடுதி’’ – முதலமைச்சர் அண்ணா அடிக்கல் நாட்டினார்!

அந்நாளில், திருச்சி மாவட்ட மருத்துவ மனையில் குழந்தைகள் நலப் பிரிவு இல்லை என்பதால், அந்நாள் மருத்துவ இயக்குநர் (DMS) திருமதி மரைக்காயர் வழியாக அய்யாவிடம் நன்கொடை தேவை பற்றி, என்மூலம் தமிழ்நாடு  அரசு, வேண்டுகோள் விடுத்ததை ஏற்று, ஒரு லட்சம் ரூபாய் பெரியார் அறக்கட்டளை மூலம் அளித்தார் தந்தை பெரியார்.  அப்போது அறிஞர் அண்ணா முதலமைச்சர்; எஸ்.ஜே.சாதிக்பாட்சா மருத்துவத் துறை அமைச்சர்.

அதற்கான அடிக்கல் நாட்டு விழா, மாவட்ட ஆட்சியர்கள் மாநாடு நடைபெற்ற ஒரு நாள் மாலையில் நடைபெற்றது. அந்நிகழ்வில், தமது அமைச்சரவையின் ஒன்பது அமைச்சர்களும் கட்டாயம் கலந்துகொள்ள முதலமைச்சர் அண்ணா தாக்கீது விடுத்து, மிக அருமையானப் பொழிவினைத் தந்து ‘‘பெரியார் – மணியம்மை குழந்தைகள் நல விடுதி’’ அமைக்கக் காரணமானார்.

இப்படிப் பல.

ஆற்றல்மிக்க அமைச்சர் கே.என்.நேரு

அந்தத் திருச்சி, மாநகரமாகிய பின் தி.மு.க.வின் ஆற்றல்மிகு முதல மைச்சர்கள் வரிசையில், அறிஞர் அண்ணா, கலைஞர், இன்றைய முதல மைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்டா லின் அவர்களது ‘திராவிட மாடல்’ ஆட்சி யில் பல்வேறு வளர்ச்சிப் பணிகள் அபாரமாக நடைபெற்று வருகின்றன. ஆற்றல்மிகு முதலமைச்சரது குறிப்பறிந்து செயல்படும் வகையில், முதலமைச்சரின் வழிகாட்டுதல்படி, நெரிசல் மிக்க நகரான திருச்சிக்குப் பல்வேறு அதிசயத்தக்கத் திட்டங்களை நகராட்சித் துறை, குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள், அடுக்கடுக்காகத் திட்டங்க ளைக் கொண்டு வந்து, கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு பலரையும் அரவணைத்து, திருச்சி மாநகரில் பிரமிக்கத்தக்க பல வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்தி வருகிறார்.

ஆசிரியர் அறிக்கை

நேரில் கண்டோம், மகிழ்ந்தோம் – முதலமைச்சரையும், அமைச்சர் நேருவையும் பாராட்டுகிறோம்!

அண்மையில், பஞ்சப்பூரில் உலகத் தரம் வாய்ந்த (காந்தி மார்க்கெட் பகுதியில் உள்ள நெருக்கடியைத் தீர்க்க) ‘‘பஞ்சப்பூர் பெரியார் காய்கறி அங்காடி’’ என்று பெயர் சூட்டப்பட்டு, அதில் வணிக வளாகம், லாரி ஓட்டுநர்கள் தங்கி ஓய்வெடுத்து பயணத்தைத் தொடருவதற்கு கனரக சரக்கு வாகன முனையம், (மேலை நாடுகளுக்கு இணையாக பல்வேறு வசதிகள் கொண்டது) நமது முதல மைச்சர் நிதி ஒதுக்கியதன்மூலம் அமைக்கப்பட்டுள்ள, அதிசயிக்கத்தக்க சாதனையைக் கண்டேன்; கண்டறியாத தைக் கண்டேன் மகிழ்ச்சி! முதலமைச்ச ரையும், அமைச்சரையும், திருச்சி மேயரையும், அவருடைய குழுவினரையும், அதிகாரிகளையும் எப்படிப் பாராட்டுவது – இன்ப அதிர்ச்சிக்கு ஆளானேன்!

ஆசிரியர் அறிக்கை

மூன்று தலைவர்கள் – தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் என கம்பீரமாகக் காட்சியளிக்கும் சிலைகள் எவரையும் வியக்க வைக்கவே செய்கின்றன!

பயணிகள் வசதிக்கென பலப்பல புதுமைத் திட்டங்கள். நிதி நெருக்கடியிலும் – மாநகரத்தின் பெருவளர்ச்சியை உலகத்திற்குப் பறைசாற்றும் வகையில், மக்கள் நலம் சார்ந்த திட்டங்கள் அமைந்துள்ளதைக் கண்டு பரவசம் அடைந்தோம்.

ஆசிரியர் அறிக்கை

எளிய மக்கள் உள்பட பலரும் வருகை தந்து பார்த்து மகிழ்ந்தனர்.

பாராட்டத்தக்க சாதனைகளின் உச்சம் – முதலமைச்சர் அவர்களையும், துறை அமைச்சர் அவர்களையும் மக்கள், கட்சி வேறுபாடுகளைத் தாண்டி, பாராட்டுகின்றனர். பலர், ‘‘நேரில் சென்று, நீங்கள் பார்த்து வாருங்கள்’’ என்றனர்.

கண்டோம், மகிழ்ந்தோம் – முதல மைச்சரையும், அமைச்சர் கே.என்.நேரு அவர்களையும் பாராட்டுகிறோம்!

அதுபோல, பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யா மொழி அவர்களின் சீரிய முயற்சியால், ஏற்படுத்தப்பட்டுள்ள மாதிரி பள்ளிக்கூடம் திருச்சி மாநகர் கல்வி அணிகலனாகக் காட்சி அளிப்பதைப் பலரும் போற்றினர்.

ஆசிரியர் அறிக்கை

சாதனை ஆட்சிக்குப் பெயர்தான்
‘‘திராவிட மாடல்’’ ஆட்சி!

சாதனை ஆட்சிக்குப் பெயர்தான் ‘திராவிட மாடல்’ ஆட்சி; சரித்திரம் படைப்பதுதான் சமூகநீதிக்கான, அனை வருக்கும் அனைத்தும் அளிக்கும் ஒப்பற்ற மக்கள் ஆட்சி!

தந்தை பெரியார், அண்ணா, கலைஞர் ஆகிய தலைவர்களின் சிலை உயர் சரித்திரச் சின்னங்களாக என்றென்றும் விளங்கும் என்பது உறுதி – நமது நெஞ்சம் நிறைந்த வாழ்த்துகள்!

கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்

சென்னை
23.5.2025

 

Ad imageAd image

You Might Also Like

மாண்புமிகு முதலமைச்சருக்கும், உயர்கல்வித் துறை அமைச்சருக்கும் நமது பாராட்டும், நன்றியும்!

மாநில முதலமைச்சர்களை ஒருங்கிணைக்கும் நமது முதலமைச்சரின் அணுகுமுறை ஞாலம் பாராட்டி வாழ்த்தவேண்டிய நிலைப்பாடு!

புதிய சட்டம் செய்யவில்லை – இருப்பதைப் பயன்படுத்தி வழங்கப்பட்ட தீர்ப்பே!

69 விழுக்காடு அடிப்படையில் அனைத்துக் கோவில்களிலும் அர்ச்சகர் நியமனம் தேவை! எவ்வித இடையூறுமின்றி அர்ச்சகர் பயிற்சி வகுப்புகளைத் தொடரவேண்டும்!

நாடாளுமன்றத்தைக் கூட்டி, நடந்தவற்றை விளக்கி அனைத்துத் தரப்பினரையும் ஒருங்கிணைக்க பிரதமர் முன்வரவேண்டும்!

TAGGED:கே.என்.நேருதிருச்சி
Share
Leave a Comment

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

Ad imageAd image
- Advertisement -
Ad imageAd image

நடக்கவிருக்கும் நிகழ்ச்சிகள்

About US

"Viduthalai" is a Tamil newspaper founded by the social reformer Thanthai Periyar, in 1935. Aimed at promoting rationalism, social justice, and gender equality, it played a crucial role in advocating for the rights of marginalized communities in Tamil Nadu. The newspaper remains significant in the legacy of Periyar’s movement for a more equitable society. Under the able leadership of K. Veeramani, the current editor of "Viduthalai," the newspaper continues to uphold the values of Periyar's vision for social justice and equality. Veeramani, a prominent activist and advocate for rationalism, has revitalized the publication, ensuring it addresses contemporary issues while staying true to its foundational principles.
Quick Link
  • தந்தை பெரியார்
  • ஆசிரியர் அறிக்கை
  • திராவிடர் கழகம்
  • வாழ்வியல் சிந்தனைகள்
  • தலையங்கம்
  • தமிழ்நாடு
  • அரசியல்
  • உலகம்
  • கட்டுரை
  • மேலும்
    • கழகம்
    • அப்பா மகன்
    • அரசு
    • அறிவியல்
    • அறிவியல் அரங்கம்
    • ஆசிரியர்
    • ஆசிரியர் உரை
    • ஆசிரியர் விடையளிக்கிறார்
    • இந்நாள் – அந்நாள்
    • இளைஞர் அரங்கம்
    • உடற்கொடை
    • ஊசி மிளகாய்
    • ஒற்றைப் பத்தி
    • கடிதம்
    • கழகக் களத்தில்
    • கவிதை
    • குரு – சீடன்
    • சட்டமன்றச் செய்திகள்
    • சிறப்புக் கட்டுரை
    • தந்தை பெரியார் அறிவுரை
    • தலையங்கம்
    • நடக்க இருப்பவை
    • நூல் அறிமுகம்
    • நேர்காணல்
    • பகுத்தறிவுக் களஞ்சியம்
    • பதிலடிப் பக்கம்
    • பிற இதழிலிருந்து…
    • பெரியார் கேட்கும் கேள்வி!
    • போர்வாள்!
    • மகளிர் அரங்கம்
    • மருத்துவம்
    • மறைவு
    • மற்றவை
    • மின்சாரம்
    • வரலாற்றுச் சுவடுகள்
  • E-Paper
  • OTTOTTOTT
Other Links
  • Print Subscription
  • Privacy Policy
  • Contact
Our Other Publications
  • Unmai Magazine
  • The Modern Rationalist
  • Periyar Pinju Children’s Magazine
  • Dravidian Book House
© Viduthalai. All Rights Reserved.
Welcome Back!

Sign in to your account

Username or Email Address
Password

Lost your password?