நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்பது ஏன்? தமிழ்நாட்டுக்கான நிதி உரிமை பெறவே இந்தப் பயணம் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் விளக்கம்

Viduthalai
2 Min Read

சென்னை, மே 22 –மே 24ஆம் தேதி பிரதமர் தலைமையில் நடை பெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் தாம் கலந்து கொள்வது தமிழ் நாட்டுக்குரிய நிதி உரிமையைப் பெற்றிடவே என்று விளக்கம் அளித் தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்.

புதுடில்லியில் வருகிற
24ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பங்கேற்பதை வெள்ளைக்கொடி ஏந்திச் செல்கிறார் என எடப்பாடி பழனிசாமி விமர்சித்துள்ளார். இதற்கு பதிலடி தரும் வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ள வலைதளப் பதிவில், தமிழ்நாட்டுக்கான நிதி உரிமையைப் பெறவே தான் டில்லி செல்கிறேன் எனவும், எந்நாளும் உரிமைக் கொடியைத் தான் ஏந்துவேன், ஊர்ந்து போகமாட்டேன், ஒரே ரெய்டில் பா.ஜ.க. வுக்குப் பயந்து வெள்ளைக்கொடியேந்தி கூட்டணி சேர்ந்துள்ள பழனிசாமி என்னை விமர்சிக்கலாமா? என பதிலடி கொடுத்துள்ளார்.

நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க நாளை (23.05.2025) டில்லி செல்லும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் 24–ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடை பெறும்இக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார் அப்போது தமிழ் நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை காலதாமதம் செய்யாமல் வழங்குவதுடன் பல வளர்ச்சித் திட்டங்களை செயல்படுத்த கூடுதல் நிதி வழங்க வேண்டும் என வலியுறுத்த உள்ளார்.

இந்நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்அவர்கள் நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்பது குறித்து எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

எடப்பாடி பழனிசாமிக்கு பதிலடி கொடுத்து நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளச் செல்வது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சமூக வலை தளப் பதிவில் தெரிவித்தி ருப்பதாவது: –

தமிழ்நாட்டிற்கான நியாயமான நிதிஉரிமையை நிதி ஆயோக் கூட்டத்தில் வெளிப்படுத்த 24ஆம் தேதி டில்லி செல்கிறேன்!

சசிகலா முதல் அமித் ஷா வரை ஆள்மாறினாலும், டேபிளுக்கு அடியில் காலைப்பிடிக்கும் பழக்கம் மாறாத எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமிக்கு இதனைக் கண்டு ஏன் வலிக்கிறது?

“பா.ஜ.க.வுடன் கூட்டணி கிடை யாது” என்று அடித்துச் சொன்ன நாக்கின் ஈரம் காய்வதற்குள், ஒரே ரெய்டில் ‘புலிகேசி’யாக மாறி ‘வெள்ளைக்கொடி ஏந்தச் சென்ற’பழனிசாமி என்னைப் பார்த்து வெள்ளைக்கொடி ஏந்தி யதாகப் பேச நா கூசவில்லையா?

இந்த ஸ்டாலினின் கை கருப்பு சிவப்புக்கழகக் கொடியை ஏந்தும் கை! பேரறிஞரால்தூக்கிவிடப்பட்ட கை! கலைஞரின் கரம் பற்றி நடந்த கை! எந்நாளும் உரிமைக் கொடியைத்தான் ஏந்துவேன்! ஊர்ந்து போகமாட்டேன்!

இன்றைக்குக் கூட, தமிழ் நாட்டின் உரிமைக்காக உச்ச நீதிமன் றத்தில் வழக்கு தொடுத் துள்ளேன்.

கொண்ட கொள்கையில் உறுதி யாக நிற்பேன்! தமிழ்நாட்டிற்கான நிதியைப் போராடிப் பெறுவேன்!

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பதிலடி கொடுத்துள்ளார்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *