அச்சரப்பாக்கம், மே 22– கோவில் விழா வின் போது மின்கம்பி மீது தேர் உரசி தீப்பிடித்து எரிந்ததில் இளைஞர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
தேர்த் திருவிழா
செங்கல்பட்டு மாவட்டம் அச்ச ரப்பாக்கத்தை அடுத்த ஒரத்தி கிராமத்தில் திரவுபதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் வசந்த உற்சவ விழா கடந்த 2 ஆம் தேதி தொடங்கியது. மழை காரணமாக 4 நாள்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வசந்த உற்சவம் கடந்த 17 ஆம் தேதி மீண்டும் தொடங்கி யது.
19 ஆம் தேதி இரவு டிராக்டரில் தேரை வைத்து தேர் திருவிழா நடந்தது. தேர் மருத்துவமனை சாலையில் செல்லும்போது தாழ்வாக சென்ற உயர் மின்னழுத்த கம்பி மீது தேர் உரசியதில் தேர் முழுமையாக எரிந்து சேதமடைந்தது. இதில் ஒரத்தியை சேர்ந்த ராம்குமார் (வயது 24) உடல் கருகி சம்பவ இடத்தி லேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
4 பேர் படுகாயம்
ஒரத்தியைச் சேர்ந்த ஆதி கேசவன் (30), சிவா (20) வட மணி பாக்கம் ஜானகிராமன் (14), குப்பன் (60) ஆகியோர் படுகாயமடைந்தனர், அவர்கள் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் அனும திக்கப்பட்டனர்.
உடனடியாக அந்த பகுதி யில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு தேரில் பற்றிய தீ அணைக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் ஓரத்தி காவல்துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினர்.
உயிரிழந்த ராம்குமாரின் உடலை மீட்டு உடற்கூராய்விற்காக மதுராந்தகம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.