சென்னை போக்குவரத்தில் 5 விதிமீறல்களுக்கு மட்டுமே அபராதம் சென்னை ஆணையர் அறிவிப்பு

1 Min Read

சென்னை காவல்துறை ஆணையர் அருண் இன்று விடுத்த உத்தரவில் பின்வரும் 5 விதி மீறல் களுக்கு மட்டுமே சாலையில் அபராதம் விதிக்கப் படும் என்று அறிவித்தார்.

  1. அதி வேகமாக வாகனம் ஓட்டுதல்
  2. தலைக்கவசம் அணியாமல் இரு சக்கர வாகனத்தில் பயணித்தல்
  3. தடுக்கப்பட்ட வழியில் (No Entry) பயணித்தல்
  4. மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டுதல்
  5. இருவருக்கு மேல் இரு சக்கர வாகனத்தில் பயணித்தல்.

சென்னையில் மட்டும் நாளொன்றுக்கு 2000 முதல் 3000 வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

பொது மக்களும் வீதி முறைகளைச் சரியாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இரு முறைக்கு மேல் தொடர்ந்து தவறிழைப்போர் மேல் நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்படுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *