தொடங்கியது குற்றாலம் பெரியாரியல் பயிற்சிப் பட்டறை!

Viduthalai
1 Min Read

அரசியல்

தென்காசி, ஜூலை 28. குற்றாலம் பெரியாரியல்  பயிற்சிப் பட்டறையை பொதுச்செயலாளர் வீ. அன்புராஜ் தொடங்கி வைத்தார்.தென்காசி மாவட்டத்தில் உள்ள   குற்றாலம் தேர்வு நிலை பேரூராட்சியில் உள்ள வி. கே. என்  மாளிகையில், 44 ஆம் ஆண்டு  பெரியாரியல்  பயிற்சிப் பட்டறை ஜூலை  28 முதல் ஜூன் 1 வரை நடைபெறுவதாக திட்டமிட்டு, ஜூலை 28 அன்று காலை 10 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ்  தொடங்கி வைத்தார்.

அரசியல்

நிகழ்வுக்கு  தென்காசி மாவட்ட தலைவர் வழக் குரைஞர் த. வீரன் தலைமையேற்றார். பகுத்தறிவா ளர்களாக மாநிலத் துணைச் செயலாளர் கே.டி.சி. குருசாமி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன், மாநில ஒருங்கிணைப்பாளர்கள் தஞ்சை இரா. ஜெயக்குமார், ஒரத்தநாடு இரா. குணசேகரன், துணைப் பொதுச் செயலாளர் ச. பிரின்சு என்னரெசு பெரியார், பேராசிரியர் காளிமுத்து, கழகக் காப்பாளர் மா. பால்ராசேந்திரம் ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

முதல் வகுப்பை ” பெரியார் ஓர் அறிமுகம் ” எனும் தலைப்பில், திராவிடர் கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் நடத்தினார். காப்பாளர் சி.டேவிட் செல்லத் துரை, மாவட்டச் செயலாளர் வே முருகன், மாநில ஊடகப் பிரிவு தலைவர் அழகிரிசாமி ஆகியோர் முன்னிலை வகுத்து சிறப்பித்தனர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *