சென்னை, மே 20 ஜூலை மாதம் நடைபெற உள்ள 10, 11-ஆம் வகுப்பு துணை தேர்வுக்கு மே 22 முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வு துறை அறிவித் துள்ளது.
10,11 துணைத் தேர்வு
இதுதொடர்பாக அரசு தேர்வுகள் இயக்குநர் ந.லதா நேற்று (19.5.2025) வெளி யிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ள தாவது: கடந்த மார்ச் – ஏப்ரலில் நடந்த 10, 11-ஆம் வகுப்பு (பிளஸ் 1) பொதுத் தேர்வுகளில் தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராத மாணவர்கள் மற்றும் தகுதியுள்ள தனி தேர்வர்களிடம் இருந்து துணை தேர்வுக்கு இணைய வழியில் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. துணை தேர்வு ஜூலை மாதம் நடைபெறும்.
பள்ளி மாணவர்கள் தாங்கள் படித்த பள்ளியில் மே 22 முதல் ஜூன் 4-ஆம் தேதி வரை நாள்தோறும் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை விண்ணப்பிக்கலாம். தனி தேர்வர்கள் அரசு தேர்வு துறையின் சேவை மய்யங்கள் மூலம் விண்ணப்பிக்க வேண் டும். கல்வி மாவட்டங்கள் வாரியாக அமைக்கப்பட்டுள்ள சேவை மய்யங்களின் விவரங் களை தேர்வு துறை இணைய தளத்தில் (www.dge.tn.gov.in) அறிந்துகொள்ளலாம்.
சிறப்பு அனுமதி திட்டம்
கடைசி நாளான ஜூன் 4-ஆம் தேதிக்குள் விண்ணப் பிக்கா விட்டால், சிறப்பு அனுமதி திட்டத்தில் உரிய கட்டணத்துடன் ஜூன் 5, 6-ஆம் தேதிகளில் விண்ணப்பிக்க வேண்டும். சிறப்பு அனுமதி கட்டணம் 10-ஆம் வகுப்புக்கு ரூ.500 மற்றும் 11-ஆம் வகுப்புக்கு ரூ.1,000 ஆகும். 2024-2025-ஆம் கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்து தேர்ச்சி பெறாத, தேர்வுக்கு வராத மாணவர்களுக்கு இந்த கட்ட ணம் கிடையாது. 10-ஆம் வகுப்பு துணை தேர்வுக்கு விண் ணப்பிக்க உள்ள நேரடி தனி தேர்வர்கள் (முதல்முறையாக அனைத்து பாடங்களையும் எழுதுவோர்), ஏற்கெனவே 2012-க்கு முன்பு பழைய பாடத்திட்டத்தில் தேர்வு எழுதி அறிவியல் பாடத்தில் தோல்வி அடைந்தவர்கள், கடந்த மார்ச் – ஏப்ரலில் நடந்த அறிவியல் செய்முறை தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள், தேர்வுக்கு வராதவர்கள் அறிவியல் செய்முறை பயிற்சி வகுப்பில் சேர, சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அதிகாரி அலுவலகத்தில் மே 23 முதல் 30-ஆம் தேதிக்குள் ரூ.125 செலுத்தி பெயரை பதிவு செய்து ஒப்புகை சீட்டு பெற வேண்டும். இதை சேவை மய்யத் தில் காண்பித்தால் மட்டுமே கருத்தியல் (தியரி) தேர்வுக்கு பதிவுசெய்ய முடியும்.
தேர்வுக்கூட நுழைவு சீட்டு
செய்முறை தேர்வில் மட்டும் பங்கேற்க உள்ள தனி தேர்வர்களும் தவறாமல் சேவை மய்யத்துக்கு சென்று, கருத்தியல் தேர்வுக்கும் விண்ணப்பித்து ஒப்புகை சீட்டு பெற வேண்டும். அதில் உள்ள விண்ணப்ப எண்ணை பயன்படுத்தி தேர்வுக் கூட நுழைவு சீட்டை (ஹால் டிக்கெட்) பின்னர் பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
நுழைவு சீட்டு இருந்தால் மட்டுமே செய்முறை தேர்வுக்கு அனுமதிக்கப்படுவார்கள். 10, 11-ஆம் வகுப்பு துணை தேர்வு கால அட்டவணையை அரசு தேர்வுத் துறையின் இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்
இதனிடையே தமிழ்நாடு முழுவதும் 10, பிளஸ் 1 வகுப்பு மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நேற்று (19.5.2025) வழங்கப்பட்டது. தேர்ச்சி பெற்றவர்கள் மேற்படிப் புக்கு விண்ணப்பிக்க வசதியாக, அந்தந்த பள்ளிகளில் மே 19-ம் தேதி பிற்பகல் 2.30 மணிக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தேர்வுத் துறை அறிவித்தது. அதன்படி, தமிழ்நாடு முழுவதும் பள்ளிகளில் மாணவ, மாணவிகளுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் நேற்று மாலை வழங்கப்பட்டது. அரசு தேர்வு துறையின் இணையதளத்தில் மதிப்பெண் சான்றிதழை பதிவிறக்கம் செய்த தலைமை ஆசிரியர்கள், அதில் கையெழுத்திட்டு பள்ளி முத்திரையுடன் மாணவர் களுக்கு வழங்கினர்.