கிறிஸ்தவ ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்கள் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்

1 Min Read

சென்னை, மே 20 ஆதிதிராவிடர், பழங் குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் மாணாக்கருக்காக செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம் மற்றும் பிற கல்வி உதவித்தொகை திட்டங்களின் கீழ் 2024-2025 ஆம் கல்வி யாண்டில் மாணாக்கர்களிடமிருந்து விண் ணப்பங்கள் இணையவழியில் பெறப்பட்டு ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கில் கல்வி உதவித்தொகை வரவு வைக்கப்பட்டு வருகின்றன.

தற்போது 2024-2025-ஆம் கல்வி யான்டிற்கு கல்வி உதவித்தொகைக்கு விண்ணப்பிக்க கடைசி நாள் 30.05.2025 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

எனவே கல்வி உதவித்தொகை விண் ணப்பிக்காத ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் இன மாணாக்கர்கள் UMIS (University Management Information System) என்ற இணையதளத்தில் (https://umis.tn.gov.in/) உடனடியாக விண்ணப்பித்து பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். மேலும் கல்லூரி நிர்வாகங்கள் மாணாக்கருக்கு கல்வி உதவித்தொகை விண்ணப்பிக்க உதவிடுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *