ரூபாய் 1,723 கோடிக்கு பரிவர்த்தனை: 30 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு! முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

Viduthalai
4 Min Read

அரசு, தமிழ்நாடு

சென்னை.ஜூன் 28 – தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (27.6.2023) சென்னை, நந்தம் பாக்கம், சென்னை வர்த்தக மய்யத்தில் நடைபெற்ற பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழாவில், சுமார் 30,000 நபர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக் கிடும் வகையில் ரூ.1723.05 கோடி மதிப்பிலான முதலீடுகள் உறுதி செய்யப் பட்டது.

நாட்டின் பொருளாதார வளர்ச்சிக் கும், வேலைவாய்ப்பு அளிப்பதிலும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் ஆற்றிடும் பங்களிப்பினை அங்கீகரிக்கும் விதமாக, ஒவ்வொரு ஆண்டும் ஜுன் 27ஆம் நாள் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாளாகக் கொண்டாடப் பட்டு வருகிறது.

 முதலமைச்சர் பன்னாட்டு குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங் கள் நாளினை அரசு விழாவாகக் கொண்டாடிட வேண்டும் என ஆணையிட்டார். அதன்படி, சென்னை வர்த்தக மய்யத்தில் பன்னாட்டு குறு, சிறு மற் றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் நாள் விழா அரசு விழாவாக சிறப்பான முறையில் நடைபெற்றது.

அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடித் திட்டம்

இவ்விழாவில் முதலமைச்சர் சமத்து வபுரம் தந்து சமூக நீதி காத்திட்ட சமூக நீதி காவலர் முன்னாள் முதலமைச்சர் கலைஞர் வழியில் பொருளாதார வளர்ச்சியில் சமூக நீதியை நிலை நாட்டிடும் விதமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனை வோரை ஊக்குவிக்கும் வண்ணம், இந்த ஆண்டு தமிழ்நாடு அரசு கொண்டு வந்துள்ள புதிய திட்டமான “அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டத்தின்” கீழ் முதல் 100 பயனாளி களுக்கு ரூ.57.55 கோடி திட்ட மதிப் பீட்டில் தொழில் தொடங்க ரூ.18.94 கோடி மானியத்திற்கான ஆணைகளை முதலமைச்சர் வழங்கி, தொடங்கி வைத்தார்.

இத்திட்டத்தின் கீழ் தொழிற் சாலைக் கான நிலம், கட்டடம், இயந்திர தள வாடங்கள் மற்றும் ஒரு சுழற்சிக்கான நடைமுறை மூலதனம் ஆகியவற்றின் மதிப்பில் 35 விழுக்காடு முதலீட்டு மானியத்துடன் கடன் பெற்றிட வழி வகை செய்யப்பட்டுள்ளது. இது மட்டு மல்லாமல், 6 விழுக்காடு வட்டி மானி யம் வழங்கப்படுகிறது.

மூன்று தொழிற்பேட்டைகள்

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு இத்தகைய மானிய சலுகையுடன் வேறு எந்த மாநிலத்திலும் திட்டங்கள் செயல்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்திட்டம் அறிவிக்கப்பட்ட இந்த குறுகிய மூன்று மாத காலத்தில் இதுவரை 127 ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியின தொழில் முனைவோர்களுக்கு ரூ. 24.26 கோடி மானியத்துடன் ரூ. 45 கோடி கடன் வழங்க ஒப்புதல் ஆணைகள் பெறப்பட்டுள்ளன.

குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களின் தேவையை கருத்தில் கொண்டு, செங்கல்பட்டு மாவட்டம்- கொடூர், திருச்சி மாவட்டம் – மணப் பாறை மற்றும் மதுரை மாவட்டம் – சக்கிமங்கலம் ஆகிய இடங்களில் 262.03 ஏக்கர் பரப்பளவில் ரூ. 153.22 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்பட் டுள்ள மூன்று தொழிற்பேட்டைகளை தொடங்கி வைத்தார். இதன்மூலம் சுமார் 21,500 நபர்களுக்கு வேலை வாய்ப்பு உருவாக்கப்படும்.

குறுந்தொழில் குழும மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் முதல் குறுந்தொழில் குழுமமாக கடலூர் மாவட்டம், பண் ருட்டி வட்டம், காடம்புலியூரில் ரூ.2 கோடியே 16 இலட்சம் திட்ட மதிப் பீட்டில், அதில் ரூ.1.81 கோடி தமிழ்நாடு அரசு மானியத்துடன் அமைக்கப்பட் டுள்ள முந்திரி பதப்படுத்தும் குறுந் தொழில் குழுமத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாட்டில் பரவலாக குறுந் தொழில் நிறுவனங்கள் கொண்ட பல் வேறு குறுங்குழுமங்கள் (Micro Cluster) உள்ளன. ஊரகப் பகுதிகளில் நீடித்த நிலையான வேலைவாய்ப்பினை உறுதி செய்திடவும், பாலினம் மற்றும் சமூக சமநிலையை உறுதிபடுத்திடவும் இந்த குறுங்குழுமங்களை மேம்படுத்துவது இன்றியமையாதது ஆகும்.

இக்குறு நிறுவனங்களின் மேம்பாட் டிற்காக “குறுந்தொழில் குழும மேம் பாட்டுத் திட்டம்” என்ற புதிய திட் டத்தை கடந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்டு, இது வரை 28 குறுங்குழுமங்கள் ரூ.117.33 கோடி தமிழ்நாடு அரசு மானியத்துடன் ரூ.143.47 கோடி திட்டமதிப்பீட்டில் அமைத்திட ஒப்புதல் அளிக்கப்பட்டு பல்வேறு நிலைகளில் செயல்படுத்தப் பட்டு வருகிறது என்பது குறிப்பிடத் தக்கது.

பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம்

மேலும் மாணவர்களின் எதிர் காலத்தினை கருத்தில் கொண்டு, மாணவர்கள் புத்தாக்க சிந்தனையுடன் படிப்பு முடித்தப்பிறகு பலருக்கு வேலை கொடுப்பவராக மாற்றக்கூடிய “பள்ளி புத்தாக்க மேம்பாட்டுத்திட்டம்” தமிழ் நாடு அரசால் கடந்த ஆண்டு தொடங்கி வைக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தின் முதல் பதிப்பின் கீழ் வெற்றி பெற்ற 10 மாணவ அணிகளின், புத்தாக்கக் கண்டுபிடிப்புகளுக்கு மாண்பு மிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலா ரூபாய் ஒரு இலட்சம் வீதம் 10 இலட்சம் ரூபாய்க்கான காசோலை களை வழங்கினார். சமச்சீர் வளர்ச்சியை முன்னெடுக்கும் விதமாக தமிழ்நாட் டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் அனைத்து தொழில் பிரிவுகளையும் உள்ளடக்கிய ரூ.1510 கோடி மதிப்பில் 7,400 வேலைவாய்ப்புகளை உருவாக் கிடும் வகையில், கடன் வசதியாக்கல் மற்றும் தொழில்நுட்ப கட்டமைப் பிற்கான ஃபேம் டிஎன்  (FaMe TN)  அமைப்பிற்கும், தொழில் முனைவோர் களுக்கும் இடையே 100 புதிய முதலீடு களுக்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் முன்னிலை யில் மேற்கொள்ளப்பட்டன.

மேலும், சிட்பி மூலம் கடன் பெறும் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்களுக்கு தமிழ்நாடு அரசின் சலுகைகளை வழங்கிடவும், குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறையின் மூலம் நடைமுறைப்படுத்தப் படும் திட்டங்களுக்கு சிட்பி மூலம் நிதி ஆதாரங்கள் ஏற்படுத்திடவும் கடன் வசதி யாக்கல் மற்றும் தொழில் நுட்ப கட்ட மைப்பிற்கான ஃபேம் டிஎன்  (FaMe TN) மற்றும் சிட்பி(SIDBI) இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் முதலமைச்சர் முன்னிலையில் மேற்கொள்ளப்பட்டன.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *