பெரியார் பற்றாளர் இரா.பேச்சிமுத்து மறைவு தமிழர் தலைவர் ஆசிரியர் இரங்கல்

1 Min Read

தென்காசி, மேலப்பாவூரைச் சேர்ந்த பெரியார் பற்றாளரும், திராவிட இயக்கத் தோழருமான
இரா.பேச்சிமுத்து (வயது 77)   மறைந்தார் (15.5.2025) என்பதை அறிந்து வருந்துகிறோம்.

குற்றாலம் நகர திமுகவின் மேனாள் பொருளாளராகவும்,  தென்காசி மாவட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் சங்கத்தின் துணைத் தலைவராகவும் செயல்பட்ட, இரா.பேச்சிமுத்து குற்றாலத்தில் ஆண்டு தோறும் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப் பட்டறைகளின் வெற்றிக்கு எப்போதும் துணை நிற்பவர். அவரது மறைவு அவரது குடும்பத்திற்கும், திமுகவிற்கும் மட்டுமல்ல, திராவிடர் கழகத்திற்கும் பேரிழப்பு ஆகும். பேச்சிமுத்து போன்ற எளிய தோழர்களின் உழைப்பே திராவிட இயக்கத்தின் மாபெரும் பலமாகும்.

அவரது குடும்பத்தினருக்கு ஆறுதலையும் மறைந்தவருக்கு நமது ஆழ்ந்த இரங்கலையும் வீரவணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

(கி.வீரமணி)

தலைவர், திராவிடர் கழகம்

 

சென்னை

17.5.2025

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *