கவனத்திற்குரிய முக்கிய செய்திகள் 17.5.2025

2 Min Read

டெக்கான் கிரானிக்கல், சென்னை:

* தமிழ்நாடு ஆளுநருக்கு எதிரான வழக்கில் உச்சநீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக, நீதிமன்றத்திற்கு குடியரசுத் தலைவர் கேள்விகளை எழுப்பியிருந் தார். இது குறித்து எடுக்கப்பட வேண்டிய சட்ட நடவடிக்கை பற்றி பிற மாநில முதலமைச்சர்கள், அரசியல் தலைவர்களுடன் விவாதிக்க மு.க.ஸ்டாலின் முடிவு.

இந்தியன் எக்ஸ்பிரஸ்:

* ஆபரேஷன் சிந்தூர்: “பிரதமர் மோடியின் காலடியில் ராணுவ வீரர்கள்”.. ம.பி துணை முதலமைச்சர் பேச்சால் சர்ச்சை!

* “ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கைக்குப் பிறகு மொத்த நாடும், ராணுவ வீரர்களும்” பிரதமர் நரேந்திர மோடியின் காலில் விழுந்து வணங்கினர்” என்று மத்தியப் பிரதேச துணை முதலமைச்சர் ஜகதீஷ் தேவ்தா கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என காங்கிரஸ் கட்சி வலியுறுத்தி உள்ளது.

தி இந்து:

* மராத்தா ஒதுக்கீட்டிற்கு எதிரான மனுக்களை விசாரிக்க மும்பை உயர்நீதிமன்றம் சிறப்பு அமர்வை அமைத்தது.

* ஆளுநர் அதிகாரம் குறித்த தீர்ப்பில் உச்சநீதிமன்றம் விதித்த மூன்று மாத காலக்கெடு ஒன்றிய அரசு 2016ல் உள்துறை அமைச்சகம் வெளியிட்ட இரண்டு அலுவலக குறிப்பாணைகள் மூலம் வழங்கப்பட்ட வழிகாட்டுதல்களுடன்  ஒத்துப்போகிறது என்று உச்ச நீதிமன்ற தீர்ப்பு கூறியுள்ளது.

* காங்கிரஸ் கட்சியின் சிக் ஷா நியாய் சம்வாத் திட்டத்தின் ஒரு பகுதியாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி மாணவர்களுடன் உரையாடுவதை தடுக்க மாநில அரசு முயற்சிப்பதாக பீகார் காங்கிரஸ் குற்றச்சாட்டு.

* ஆளுநர் அதிகாரம் குறித்த உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு குறித்து குடியரசுத் தலைவரின் கருத்து கேட்பு, முடிவு செய்யப்பட்ட ஒரு கேள்வியைக் குறைமதிப்பிற்கு உட்படுத்த முயல்கிறது

தி டெலிகிராப்:

* மோடியை விமர்சிக்கும் ’குஜராத் சமாச்சார்’ பத்திரிகை அதிபர் மீது அமலாக்கத்துறை நடவடிக்கை குறித்து அரசியல் கட்சிகள் கடும் கண்டனங்கள் தெரிவித்துள்ளன.

டைம்ஸ் ஆப் இந்தியா:

*பீகாரில் இருந்து 17 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாட்டில் குடியேறி வாழும் பீகார் தொழிலாளியின் மகள் பத்தாம் வகுப்பு தமிழ் தேர்வில் 93 மதிப்பெண்களுடன் தேர்ச்சி.

– குடந்தை கருணா

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *