பெரியார் உலகத்திற்கு நிதி திரட்டி தரப்படும் ஓசூர் கலந்துரையாடல் கூட்டத்தில் தீர்மானம்

1 Min Read

ஓசூர், மே 17- ஒசூரில் நடைபெற்ற மாவட்ட இளைஞரணி-மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மா.செல்லதுரை தலைமை தாங்கி மறைந்த சுயமரியாதை சுடரொளி பேராசிரியர் கு.வணங்காமுடி படத்தை திறந்த வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.

20ஆம் தேதி ஆர்ப்பாட்டம்

தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் வருவாய் மாவட்ட தலைநகர் கிருஷ்ணகிரியில் 20ஆம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஒசூரில் இருந்து திரளாக பங்கேற்பது என்றும்,

பெரியார் உலக நன்கொடை

பெரியார் உலகத்திற்கு ஒசூர் கழக குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களிடம் நிதியை பெற்று தலைமைக்கு அளித்திட ஒசூர் மாவட்டத்தில் உள்ள கழக தோழர்கள் அனைவரும் இணைந்து சிறப்பாக செயல்படுவது என்றும்.

புதிய பொறுப்பாளர்கள்

புதியதாக பொறுப்பேற் றுள்ள தோழர்கள் செயல்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு வழங் குவது எனவும் ஒசூர் இல் பொதுக் கூட்டம் நடத்துவது என தீர்மானிக் கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கோ.கண்மணி, மாவட்ட துணைச்செயலாளர் ச.எழிலன்,சு.வனவேந்தன் மாவட்ட தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *