ஓசூர், மே 17- ஒசூரில் நடைபெற்ற மாவட்ட இளைஞரணி-மாணவர் கழக கலந்துரையாடல் கூட்டத்தில் மாநில இளைஞரணி துணைச்செயலாளர் மா.செல்லதுரை தலைமை தாங்கி மறைந்த சுயமரியாதை சுடரொளி பேராசிரியர் கு.வணங்காமுடி படத்தை திறந்த வைத்து வீரவணக்கம் செலுத்தினார்.
20ஆம் தேதி ஆர்ப்பாட்டம்
தொடர்ந்து நடைபெற்ற கலந்துரையாடல் கூட்டத்தில் வருவாய் மாவட்ட தலைநகர் கிருஷ்ணகிரியில் 20ஆம் தேதி ஒன்றிய அரசை கண்டித்து நடைபெறவுள்ள ஆர்ப்பாட்டத்தில் ஒசூரில் இருந்து திரளாக பங்கேற்பது என்றும்,
பெரியார் உலக நன்கொடை
பெரியார் உலகத்திற்கு ஒசூர் கழக குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களிடம் நிதியை பெற்று தலைமைக்கு அளித்திட ஒசூர் மாவட்டத்தில் உள்ள கழக தோழர்கள் அனைவரும் இணைந்து சிறப்பாக செயல்படுவது என்றும்.
புதிய பொறுப்பாளர்கள்
புதியதாக பொறுப்பேற் றுள்ள தோழர்கள் செயல்பாட்டிற்கு முழு ஒத்துழைப்பு வழங் குவது எனவும் ஒசூர் இல் பொதுக் கூட்டம் நடத்துவது என தீர்மானிக் கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் பொதுக்குழு உறுப்பினர் கோ.கண்மணி, மாவட்ட துணைச்செயலாளர் ச.எழிலன்,சு.வனவேந்தன் மாவட்ட தலைவர் ஆகியோர் கலந்து கொண்டனர்.