சென்னை, மே 17 தமிழ்நாடு சட்டப்பேர வையில் நிறைவேற்றப்பட்ட நான்கு சட்ட மசோதாக்களுக்கு ஆளுநர்
ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கியுள்ளார்.
கடந்த மார்ச் 14 ஆம் தேதி முதல் ஏப். 29 ஆம் தேதிவரை நடந்த சட்டப்பேரவை கூட்டத்தொடரில் 18 மசோதாக்கள் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டு ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
நீண்ட நாள்களாக ஆளுநரின் ஒப்புத லுக்காக காத்திருந்த நிலையில் இன்று (17.5.2025) 4 சட்டதிருத்த மசோதாக்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி ஒப்புதல் வழங்கி உள்ளார்.
நான்கு மசோதாக்களையும் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு பேரவையில் தாக்கல் செய்திருந்தார்.
நான்கு மசோதாக்களுக்கு ஆளுநர்
ஆர்.என்.ரவி ஒப்புதல் அளித்துள்ள நிலையில் 14 மசோதாக்கள் நிலுவையில் உள்ளன.