கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

கடலூர், ஜூன் 29- கடலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக கலந்துரை யாடல் கூட்டம் 25.6.2023 

அரசியல்

ஞாயிற்றுக்கிழமை காலை 11.00 மணியளவில் பண்ருட்டி ஜோதி ஸ்டுடியோவில் மாவட்ட பகுத் தறிவாளர் கழகத் தலைவர் இரா.கந்தசாமி தலைமையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்திற்கு மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் சொ.தண்டபாணி, மாவட்ட செயலா ளர் கவிஞர் க.எழிலேந்தி, மாவட்ட அமைப்பாளர் சி.மணி வேல் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கூட்டத்திற்கு வருகை தந்த அனைவரையும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் இரா.பெரியார் செல்வன் வரவேற்றுப்  பேசினார்.

பகுத்தறிவாளர் கழக மாநில தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், மாநில துணைத் தலைவர் கு.இரஞ்சித் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர்.

இந்த கலந்துரையாடல் கூட் டத்திற்கு பண்ருட்டி நகர தலைவர் ந.புலிக்கொடி, பண்ருட்டி ஒன்றிய தலைவர் கோ.புத்தன், பண்ருட்டி நகர செயலாளர் கோ.காமராஜ், மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர்  டிஜிட் டல் இராமநாதன், அண்ணா கிராம ஒன்றிய கழக செயலாளர் இ.இராசேந்திரன், ஒன்றிய துணை செயலாளர் வழக்குரை ஞர் ஆ.கனசபாபதி, ஒன்றிய துணை செயலாளர் வழக்குரை ஞர் ஆ.கனகசபாபதி, ஒன்றிய கழக அமைப்பாளர் பா.ஆறுமுகம், கழக தோழர்கள் செ. பன்னீர் செல்வன், க.சின்னதாயி, பெரியார் பிஞ்சுகள் க.பாவேந்தன், க.பகுத்தறிவு, தி.மு.க. தகவல் தொடர்பு அணி சி.தர்மலிங்கம், பகுத்தறி வாளர் கழக தோழர்கள் ப.சிவன், ஆர்.இராஜேந்திரன், விசுவநாதன், வி.அன்பு, திராவிடன், அந்தோணி கென்னடி ஆகி யோர் கலந்து கொண்டு கருத்துரை வழங்கினர். இறுதியில் மாவட்ட மகளிரணி தலைவர் செ.முனியம்மாள் நன்றி கூறினார்.

தீர்மானங்கள்

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் இயற்றப்பட்டன

வைக்கம் வீரர் தந்தை பெரியார் – வைக்கம் நூற்றாண்டு விழா கொண்டாடுவது என தீர்மானிக்கப்பட்டது. மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் ஆயிரம் வினா – விடை போட்டி மாவட்ட அளவில் நடத்துவது எனவும், மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் பெரியார் பயிற்சி வகுப்பு நடத் துவது எனவும் மாதம் ஒரு பிரச் சார கூட்டம் அல்லது கருத்த ரங்கம் நடத்துவது எனவும் தீர்மானிக்கப்பட்டது.

கலந்துரையாடல் கூட்டத் தில் நியமிக்கப்பட்ட புதிய பொறுப்பாளர்கள் விவரம் வருமாறு:

1. மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் : வீ.வெங்கடேசன்

2. மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் : வி.அருணாசலம்

3. மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர்: சி.தர்மலிங்கம்

4. மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணைத் தலைவர் : ப.சிவன்

5. மாவட்ட ஆசிரியரணி அமைப்பாளர்: இரா.பெரியார் செல்வன் .

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *