பொதுக்குழு தீர்மானங்களை நிறைவேற்றுவதென மேட்டுப்பாளையம் மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

2 Min Read

அரசியல்

மேட்டுப்பாளையம், ஜூன் 29- மேட்டுப் பாளையம் மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் 25.6.2023 மாலை 6:00 மணிக்கு மேட்டுப் பாளையம் வசந்தம் ஸ்டில்ஸ் மேல் மாடியில் தலைமை கழக அமைப்பாளர் த.சண்முகம் தலைமையில்  நடைபெற்றது.

கூட்டத்தில் ஈரோடு பொதுக் குழு தீர்மானங்களை நிறை வேற்ற செயல்படுவதுடன் கழக உறுப்பினர் சேர்க்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.

கூட்டத்தில் கீழ்க்கண்ட தீர் மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

ஒருங்கிணைந்த திராவிடர் கழக கோவைமாவட்டத்தின் மேனாள் தலைவரும்,  கோவை மாவட்ட கழக மண்டல தலைவர், மாவட்ட காப்பாளர், கோவை வர்த்தக சபையின் செயலாளர், சிறுநூற்பாலைகள் சங்க செயலாளர்போன்ற பல் வேறு பொறுப்புகள் வகித்த பெரியார் பெருந்தொண்டர் வசந்தம் கு.இராமச்சந்திரன் அவர் களின் மறைவிற்கும், கோவை மண்டல கழக செயலாளர் ச. சிற்றரசு, பகுத்தறிவாளர்கழ.க தோழர் சித்திரவேல், மறைந்த கு.வெ.கி.ஆசான் அவர்களு டைய துணைவியார் மறைந்த சாரதா மணி அம்மையார் அவர்களுக்கும் இரங்கல் தெரிவிக்கப் பட்டது.

மேட்டுப்பாளையம் மாவட்ட கழகத்தின் சார்பாக காரமடை ஒன்றியம் குட்டை புதூரில் பயிற்சி முகாம் நடத்து வது என்றும், மாதம் ஒரு நாள் கழகத் தோழர்கள் சந்திப்பு கூட் டம் அந்தந்த பகுதிகளில் நடத்து வது என்றும், ஈரோடு பொதுக் குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற பாடுபடுவது என்றும், திராவிடர் கழக உறுப்பினர் சேர்க்கையை விரைவுப்படுத்துவது என்றும்  தீர்மானங்கள் நிறைவேற்றப்பட் டன கூட்டத்தில் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத்தலைவர் தரும. வீரமணி,  மேட்டுப்பாளை யம் மாவட்டத் தலைவர் சு.வேலு சாமி, மாவட்ட செயலாளர் க.சு.அரங்கசாமி, மாவட்ட மேனாள் தலைவர் பா.பால சுப்ரமணியன், மாவட்ட இளை ஞரணி தலைவர் பிரதிப், மண் டல இளைஞரணி தலைவர் மு.வீரமணி, மேட்டுப்பாளையம் நகரசெயலாளர் வெ.சந்திரன், மாவட்ட அமைப்பாளர் செல்வ ராசு, தமிழ்மணி, உத்திரி நாதன், நாராயணன், லியாகத் அலி, மணி, காரமடை ஒன்றிய தலை வர் ஏ.எம்.ராஜா, மாவட்ட மகளிர் அணி தலைவர் நாகமணி, ரங்கசாமி, முத்துசாமி, நந்த குமார், குருசாமி ஆகியோர் கலந்துகொண்டனர் நகர செயலாளர் வெ.சந்திரன் நன்றி கூற கூட்டம் நிறைவடைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *