ஜெர்மனியில் விளையாட்டுப் போட்டியில் பங்கேற்கும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 12 வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.32 லட்சம் நிதி!

2 Min Read

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்

சென்னை,  மே 15  12 வீரர், வீராங்கனைகளுக்கு 32.25 இலட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் 9 வீரர், வீராங்கனைகளுக்கு 4.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன விளையாட்டு உபகரணங்களை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

நிதியுதவி

முதலமைச்சர், தமிழ்நாட்டினை விளை யாட்டில் முன்னோடி மாநிலமாக உருவாக்கிட தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையை ஏற்படுத்தி, விளையாட்டு வீரர், வீராங்கனைகள் வெளிநாடுகளில் நடைபெறும் விளையாட்டு போட்டிகளில் கலந்துகொள்ள செல்வதற்கான தங்குமிட கட்டணம், விமான கட்டணம், உணவு, அனுமதிக்கட்டணம் உள்ளிட்ட செலவுகளை மேற்கொள்ள நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பயன்படுத்த விளையாட்டு உபகரணங்களும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளையின் நிதியுதவி மூலம் வழங்கப்பட்டு வருகின்றது.

ரூ.32.25 லட்சம்

அதனடிப்படையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஜெர்மனியில் 16.7.2025 முதல் 27.7.2025 வரை நடைபெறவிருக்கும் உலக அளவில் பல்கலைகழகங்களுக்கு இடையேயான FISU விளையாட்டு போட்டியில் பங்கேற்கவுள்ள தமிழ்நாட்டை சேர்ந்த தடகள வீராங்கனை செல்வி ஏன்ஜெல் சில்வியா, வீரர்கள் செல்வன் ஜெரோம், செல்வன் அஸ்வின் கிருஷ்ணன், செல்வன் ரீகன், கூடைப்பந்து வீரர் செல்வன் சங்கீத் குமார், வீராங்கனை செல்வி தேஜசிறீ, செல்வன் சுகந்தன், கையுந்துபந்து வீராங்கனைகள் செல்வி ஆனந்தி, செல்வி சுஜி, செல்வி கனிமொழி, வீரர் செல்வன் அபிதன், வாள்வீச்சு வீராங்கனை செல்வி கனகலட்சுமி என 12 வீரர், வீராங்கனைகளுக்கு செலவினத்தொகையாக மொத்தம் 32.25 லட்சம் ரூபாய்கான காசோலைகளை தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து  வழங்கினார்.

மேலும் தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை நிதியிலிருந்து நீச்சல் வீராங்கனை செல்வி சிறீகாமினி, இறகுப்பந்து வீராங்கனை செல்வி ஜனாக்க்ஷி, தடகள வீரர் செல்வன் வாசன், செல்வன் யுகேந்திரன், வீராங்கனைகள் செல்வி ஸ்வேதா, செல்வி சிறீரேஷ்மா, கேரம் வீராங்கனைகள் செல்வி ஹரினி, செல்வி காவியா என 9 வீரர், வீராங்கனைகளுக்கு மொத்தம் 4.80 லட்சம் ரூபாய் மதிப்பிலான நவீன விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். இந்நிகழ்வில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *