ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் நடத்த வேண்டுமா? மதுரை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி

Viduthalai
2 Min Read

மதுரை, மே 15 ‘‘ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த வர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் சாமி கும்பிட உரிமை உண்டு” என உயர்நீதி மன்ற மதுரைக் கிளை தெரிவித் துள்ளது.

புறக்கணிப்பு

கரூர் சிறீ ஆரவாயி அம்மன் கோயில் திருவிழாவில், பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் தேர் செல்லாமல் புறக்கணிப்பதாக தொடரப்பட்ட வழக்கில் ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகள் பதிலளிக்க உத்தர விடப்பட்டுள்ளது.

கரூர் சிறீ ஆரவாயி அம்மன் கோயில் திருவிழாவில், பட்டியல் இன மக்கள் வசிக்கும் பகுதிக்கு மட்டும் தேர் செல்லாமல் புறக் கணிப்பதாக ரமேஷ் என்பவரால் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. கடந்த 15 ஆண்டுகளாக எங்கள் பகுதிக்கு தேர் வருவ தில்லை என்றும், இந்த ஆண்டு விழாக் குழுவிடம் முறையிட்டும் அவர்கள் மறுத்துவிட்டனர் எனவும் மனுவில் தெரிவிக்கப் பட்டிருந்தது.

“ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும்தான் விழாக்களை நடத்த வேண்டுமா? மற்றவர்கள் வேடிக்கை பார்க்க வேண்டுமா? இது ஜனநாயக நாடு. அனைவருக்கும் சாமி கும்பிடுவதற்கு உரிமை உண்டு” என நீதிபதிகள் வேல்முருகன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு காட்டமாக தெரிவித்தனர்.

அப்போது எதிர் மனு தாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞர், இந்த வழக்கில் பதில் மனுத் தாக்கல் செய்ய கால அவகாசம் வேண்டும் என வேண்டுகோள் வைத்தார். அப்போது நீதிபதிகள், “பட்டி யலின மக்கள் சாமி கும்பிட ஏன் அனுமதி இல்லை என பதில் மனுத் தாக்கல் செய்ய அவகாசம் கேட்கிறீர்கள்? பதில் மனுத் தாக்கல் செய்கிறேன் என்ற பெயரில் இந்த வழக்கை 15 ஆண்டுகள் இழுத்துக் கிடப் பில் போடுவீர்கள். அது வரை பட்டியலின மக்கள் வேடிக்கை பார்த்துக் கொண்டு இருப் பார்களா?” எனக் கேள்வி எழுப் பினர். கரூர் மாவட்ட ஆட்சியர், காவல்துறை கண்காணிப்பாளர், வருவாய் மண்டல அலுவலர், விழாக் குழு உறுப்பினர்களான சக்திவேல், செந்தில், வேலு ஆகியோர்   நேரில் ஆஜராகி வழக்குத் தொடர்பாக விளக்கம் அளிக்க உத்தரவிட்டு வழக்கை   ஒத்தி வைத்தனர்.

 

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *