பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம்

Viduthalai
1 Min Read

குமாரகுடி, மே 15- சிதம்பரம் மாவட்டம், இளைஞரணி சார்பில் சிதம்பரம் பொதுக்குழு தீர்மான விளக்கப் பொதுக்கூட்டம் மற்றும் புரட்சியாளர் அம்பேத்கார் பிறந்த தின விழா பொதுக்கூட்டம் குமாரகுடி கடை வீதியில் 03.05.2025 சனிக்கிழமை மாலை – மாவட்ட இளைஞரணி தலைவர் சிற்பி. சிலம்பரசன் தலைமையில் நடைபெற்றது.

பொதுக்குழு உறுப்பினர் சுமதி பெரியார்தாசன் வரவேற்புரை யாற்றினார்.

மாவட்ட துணைத் தலைவர் அன்பு.சித்தார்த்தன், மாவட்ட துணைச் செயலாளர் ப.முருகன், பொதுக்குழு உறுப்பினர் கோவி. பெரியார்தாசன், மாவட்ட ப.க. தலைவர் கோ.நெடுமாறன், மாவட்ட ப.க. செயலர் அ.செங்கட்டுவன் ஆகியோர் முன்னிலையேற்று உரையாற்றினர்.

திருமுட்டம் ஒன்றிய செயலாளர் கொழை.இராசசேகரன், வலசக்காடு அர.வீரமணி, மேனாள் மாவட்ட அமைப்பாளர் கு.தென்னவன், மழலை அ.செல்வராசு, திரு முட்டம் ஒன்றிய தலைவர்
க.பெரியண்ணசாமி. மழலை ‘நெல்’ செல்வம், அள்ளுர் ஜெயபால் ஆகிய தோழர்கள் உரையாற்றினர்.

மாவட்டத் தலைவர் பேராசிரியர் பூ.சி. இளங்கோவன், உரையாற்றிய பின்னர், மழவை சு.பெ தமிழமுதன் நீண்டதொரு சிறப்புரையாற்றினார்.

இறுதியில் பொதுக்குழு உறுப்பினர் கோவி. பெரியார்தாசன் நன்றி கூறினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *