பெரம்பலூர், மே 14- பெரம்பலூரில், “பெரியார் பேசுகிறார்” என்கின்ற ஒன்பதாவது மாதாந்திர கூட்டம் 10.5.2025 சனிக்கிழமை மாலை 5 மணி அளவில் மருத்துவர் குணகோமதி மருத்துவமனை வளாகத் தில் நடைபெற்றது.
கழக மாவட்ட தலைவர் சி.தங்கராசு தலைமையிலும், மாவட்ட செயலாளர் விசயேந்திரன் வரவேற்புரையோடு, மாவட்ட காப்பாளர் ஆறுமுகம், மாவட்ட துணைச் செயலாளர் சரவணன், மாவட்ட மகளிர் அணி தலைவர் மருத்துவர் குணகோமதி, மாவட்ட துணை தலைவர் சின்னசாமி, பகுத்தறிவாளர் கழக மாவட்ட தலைவர் நடராசன்ஆகியோர் முன்னிலை ஏற்க” பெரியா ரும்- தொழிலாளரும்” என்கின்ற தலைப்பில் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் இரா. எட்வின் சிறப்புரை ஆற்றினார்கள் அரங்க வேலாயுதம் அவர்கள் நன்றி கூறினார்.
தேநீர் இடைவெளிக்கு பிறகு கூட்டம் இனிதே நிகழ்வுற்றது.