விழுப்புரம் ராஜீகண்ணு மறைவு கழக நிர்வாகிகள் இறுதி மரியாதை

Viduthalai
1 Min Read

விழுப்புரம், மே 13- விழுப் புரம் மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் ரா. சிவராசன் அவர்களின் தந்தை ராஜீகண்ணு மறைவையொட்டி அன்னாருக்கு கழகத்தின் சார்பில் மாலை வைத்து மரியாதை செய்யப்பட்டது. ரா. சிவராசன் ‘புதிய சிறகுகள்’ என்ற காவல் பயிற்சி வகுப்புகள் மூலம் நானூறுக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு பெரியார், அம்பேத்கர் சிந்தனைகளை போதித்து, பயிற்சி வகுப்பெடுத்ததன் மூலம் தற்போது தமிழ்நாடு காவல் துறையில் காவலர்களாக பணியாற்றி கொண்டு இருக்கி ன்றனர்.

பெரியார்,அம்பேத்கர் சிந்தனைகளுடன் பயிற்சி வகுப் பெடுக்க 2 ஏக்கர் நிலத்தினை பயிற்சி வகுப்புக்கான இடமாக தந்தவர் மறைந்த ராஜீகண்ணு அவர்கள் தான்… அன்னாருக்கு சிவராசன் தவிர, தமிழ்நாடு காவல் துறையில் பணிபுரிந்து கொண் டிருக்கும் ரா. சத்தியராசன் என்ற மகனும், ரா. ஜீவிதா என்ற மகளும் இருக்கின்றனர்.அன்னாரது மறைவிற்கு கழக பொதுச் செயலாளர் வீ. அன்புராஜ் அவர்கள் தொலைபேசி மூலம் இரங்கல் தெரிவித்தார்.

இரங்கல் கூட்டம் விழுப்புரம் மாவட்ட தலைவர் செ.வ.போபண்ணா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் விழுப்புரம் மாவட்ட பக தலைவர் துரை திருநாவுக்கரசு, மாவட்ட செயலாளர் அரங்க. பரணிதரன்,திண்டிவனம் மாவட்ட செயலாளர் தா. இளம்பரிதி, பழங்குடி முண்ணனி தலைவர் சுட ரொளி சுந்தரம், பெரியார் பெருந்தொண்டர் அ.மு.ரா.இளங்கோவன், பொதுக்குழு உறுப்பினர் இராமச்சந்திரன், விழுப்புரம் நகர தலைவர் கோ. பூங்கவன், பெரியார் பற்றாளர் கவுதமன் மற்றும் முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினர்கள் கலந்து கொண்டு இரங்கல் உரையாற்றினர்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *