அரூர், மே 13- அரூர் மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் 10-5-2025 ஆம் தேதி மாலை 6 மணி அளவில் கடத்தூர் பழைய பேருந்து நிலையத்தில் பகுத்தறிவு பரப்புரை பொதுக்கூட்டம் திராவிடர் கழக மாவட்ட தலைவர் அ. தமிழ்ச்செல்வன் தலை மையில் நடைபெற்றது.
ஒன்றிய கழக தலைவர் பெ.. சிவலிங்கம் வரவேற்புரையாற்றினார். கடத்தூர் பேரூராட்சி தலைவர் கேஸ் கு. மணி, ஒன்றிய திமுக செயலாளர் ஆர்.சிவப் பிரகாசம், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில பொறுப்பாளர் சென்னகிருஷ்ணன், நகர கழக தலைவர் நெடுமிடல், மாவட்ட பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் மு. பிரபாகரன், மாவட்ட பகுத்தறிவாளர் கழக துணை செயலாளர் இ.சமரசம், மாணவர் அணி பொறுப்பாளர் ஆ. பிரதாப், ஒன்றிய திமுக துணைச் செயலாளர் சொ.பாண்டியன், கடத்தூர் விடுதலை வாசகர் வட்ட தலைவர் வ. நடராஜன், திமுக மாவட்ட ஆதிதிராவிடர் நலக்குழு அமைப்பாளர் கோ.குபேந்திரன், மாவட்ட மகளிர் அணி துணைத் தலைவர் முருகம்மாள் ஆகியோர் முன்னிலை ஏற்றனர்.
சிந்தை மு. ராஜேந்திரன் வாழ்விணையர் பாரதி, மகள் அமுதினி ஆகி யோருக்கு சிறப்பு செய்து மாநில கழக ஒருங்கிணைப்பாளர் ஊமை. ஜெயராமன் தொடக்க உரையாற்றினார். மாநில மகளிர் அணி செயலாளர் தகடூர், தமிழ்ச்செல்வி, மாவட்ட இளைஞரணி தலைவர் த. மு.யாழ்திலீபன், மத்தூர் கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி தாளாளர் அமுதினி ஆகியோர் கருத்துரையாற்றினர். அமுதினி பேசும் பொழுது நான் தாத்தா வீட்டில் வளர்ந்தவள், பக்தி என்று யார் வந்தாலும் பூணூல் போட்டுக் கொண்டு யார் வந்தாலும் அவர்கள் காலில் விழுந்து வழங்க சொல்லுவார் என் தாத்தா. ஆனால் என் தந்தை பிறகு அது தவறு அப்படி செய்யக்கூடாது என்று கூறி சுயமரியாதை பற்றியும், பகுத்தறிவு பற் றியும் சொல்லிக் கொடுத்து என்னை மானமுள்ள மனிதராக்கி விட்டு சென்று இருக்கிறார் என்று கண்ணீர் மல்க கூறினார்.
மறைந்த மாநில திமுக முன்னாள் தொண்டர் அணி அமைப்பாளரும், தமிழ் வளர்ச்சித் துறை இயக்கநருமான முனைவர் சிந்தை மு. இராசேந்திரன் படத்தை திராவிட முன்னேற்றக் கழக மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளரும், மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவருமான அரூர் சா. இராசேந்திரன் திறந்து வைத்தபோது, தோழர்கள் வீரவணக்கம் வீரவணக்கம் சுயமரியாதைச் சுடரொளியாம் முனைவர் மு. ராஜேந்திரனுக்கு வீர வணக்கம், பகுத்தறிவாளர் ராஜேந்திரனுக்கு வீர வணக்கம், பள்ளியில் பெரியார் சிலை நிறுவிய ராஜேந்திரனுக்கு வீர வணக்கம் என முழக்க மிட்டனர். திராவிடர் இயக்கத்தின் மீதும் தந்தை பெரியாரின் மீதும் பகுத்தறிவு கருத் துகள் மீதும் அவர் கொண்டிருந்த தீரா பற்று குறித்து சா.ராஜேந்திரன் புகழுரை ஆற்றினார்.
இறுதியாக கழக சொற்பொழிவாளர் இராம. அன்பழகன் பகுத் தறிவு கருத்துகளை கூறி சிறப்புரையாற்றினார். இந்நிகழ்ச்சியில் பகுத்தறிவாளர் கழக பொறுப்பாளர் மு.சிவக்குமார் ஒருங் கிணைத்து நடத்தினார். கிருஷ்ணகிரி மாவட்ட திராவிடர் கழக தலைவர் கோ. திராவிடமணி, தர்மபுரி மாவட்ட பொதுக்குழு உறுப்பினர் இ.மதன், அரூர் மாவட்ட மகளிர் அணி தலைவர் மணிமேகலை, மாவட்ட மகளிர் பாசறை தலைவர் கல்பனா, மாவட்ட மகளிர் அணி செயலாளர் உமா, கவுண்டம்பட்டி அறிவொளி, தருமபுரி விடுதலை வாசகர் வட்ட தலைவர் காசி சின்னராஜ், ஆசிரியர் சுந்தரம், தருமபுரி விடுதலை வாசகர் வேப்பிலைப்பட்டி சுசிலா, ரேகட அல்லி கல்பனா, மதுக்காலம்பட்டி கலா, மாரவாடி காந்தி, அரூர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் சஞ்சீவன், கடத்தூர் ஒன்றிய மாணவர் கழக வேப்பிலைப்பட்டி சூர்யா, மற்றும் தாழநத்தம் முருகன், முருகேசன், தங்கராஜ், மாயவன், கோமகன், வேலுசாமி, வேப்பிலைப்பட்டி ஊர் தலைவர் கணே சன், செயலாளர் அமுல் செல்வம், பழனி, திமுக தொழில்நுட்ப பொறுப்பாளர் தமிழழகன், ரேகடஅல்லி மாதவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இறுதியாக மாவட்ட கழக துணைத் தலைவர் ஆனந்தன் நன்றி கூறினார்.