ஏன் ராமனுக்கு சக்தி இல்லையோ?

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அயோத்தி ராமன் கோயில் பாதுகாப்பிற்கு ரூபாய் 38 கோடியில் திட்டமாம்

லக்னோ, ஜூன் 29 – அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் பாதுகாப்பிற்காக ரூ.38 கோடி ரூபாய் செலவில் திட்டத்தை செயல்படுத்துவதற்கு அதன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. உத்தரப் பிரதேசத்தின் நிர்மான் நிகாமிடம் இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கட்டப்பட்டு வரும் ராமர் நினைவுச் சின்னத்தின் பாதுகாப்பு குறித்த அனைத்து அம்சங்களையும் விவரிக்கும் விரிவான திட்ட அறிக்கை (டிபிஆர்) அரசுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

வரும் நவம்பர் மாதத்துக்குள் பாது காப்புப் பணிகள் அனைத்தையும் முடிக்க காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற் கான முதல்கட்ட திட்டம் விரைவில் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப் படுகிறது.

நிலம், நீர், காற்று போன்ற இயற்கை அச்சுறுத்தல்களிலிருந்து ராமர் கோயிலை பாதுகாக்கும் வகையில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட வுள்ளது.

நகர நிர்வாகம் கோயிலை வெளியில் இருந்துபாதுகாக்கும். உள் பாதுகாப்பு ஏற்பாடுகளை கோயில் அறக்கட்டளை மேற்பார்வையிடும். கோயிலுக்கு வெளியே துணை ராணுவப் படையினர் நிறுத்தப்படு வார்கள்.

சிசிடிவிகேமராக்கள் மற்றும் பிற நவீன கருவிகள் கோயில் பாதுகாப்புக்கு நிறுவப்படும். அனைத்து சிசிடிவி கேமராக்களையும் கண்காணிக்க ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு மய்யம் உருவாக்கப்படும்.

இதற்கான திட்டம் அரசிடம் தெரிவிக்கப்பட்டு ரூ.38 கோடிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. உள் கட்டமைப்பை உருவாக்க மாநில அரசு அனைத்து உதவிகளையும் வழங்கி வருவதாக மூத்த அரசு அதிகாரி கவுரவ் தியால் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *