பொறியியல் கல்லூரியில் சேர மாணவர்கள் ஆர்வம் 6 நாட்களில் 1 லட்சம் பேர் விண்ணப்பம்

viduthalai
1 Min Read

சென்னை, மே 13 தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் 2025-2026 கல்வியாண்டிற்கான இளங்கலைப் பொறியியல் (பி.இ./பி.டெக்.) படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை விண்ணப்பப் பதிவு  நடைபெற்று வருகிறது.

1 லட்சம் பேர் விண்ணப்பம்

விண்ணப்பப் பதிவு மே 7 ஆம் தேதி தொடங்கிய நிலையில், முதல் ஆறு நாட்களிலேயே ஒரு லட்சத்திற்கும் அதிகமான மாணவர்கள் விண்ணப்பித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இது பொறியியல் படிப்பின் மீது மாணவர்களுக்குள்ள ஆர்வத்தை வெளிப்படுத்துகிறது. குறிப்பாக, மே 11 ஆம் தேதி,  மாலை நிலவரப்படி, அதாவது விண்ணப்பப் பதிவு தொடங்கிய முதல் அய்ந்து நாட்களில், சுமார் 91,414 விண்ணப்பங்கள் பெறப்பட்டிருந்தன. முதல் நாளிலேயே 14,462 மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இந்த புள்ளிவிவரங்களின் அடிப்படையில், ஆறாவது நாளான மே 12 ஆம் தேதியுடன் பெறப்பட்ட விண்ணப் பங்களின் எண்ணிக்கை ஒரு லட்சத்தைத் தாண்டியிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பொறியியல் படிப்புகளுக்கான இணைய வழி விண்ணப்பப் பதிவு ஜூன் 6 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. மாணவர்கள் தங்களின் அசல் சான்றிதழ்களை ஜூன் 9 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். ரேண்டம் எண் ஜூன் 11 ஆம் தேதியும், தரவரிசைப் பட்டியல் ஜூன் 27 ஆம் தேதியும் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *