வி.அய்.டி. வேந்தருக்கு மூன்றாவது முறையாக டாக்டர் பட்டம்

1 Min Read

கழகத் தலைவர் பாராட்டு!

வேலுார் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தின் (VIT) நிறுவனரும் வேந்தருமான கோ.விசுவநாதன் அவர்களுக்கு, அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள ரோசெஸ்டர் தொழில்நுட்ப நிறுவனம், கடந்த 9-ஆம் தேதி கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது.

அறிவியல், தொழில்நுட்பம், இன்ஜினியரிங், மேலாண்மை கல்வியை விரிவுபடுத்துவதில், பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கு ஆதரவு அளிப்பதில் காட்டும் அர்ப்பணிப்புக்காக வி.அய்.டி., வேந்தர் விசுவநாதன் அவர்களுக்கு அளிக்கப்பட்டுள்ள இச்சிறப்பு, அமெரிக்காவில் மூன்றாவது முறையாக கவுரவ டாக்டர் பட்டம் பெற்றவர் என்ற சிறப்பையும் அவருக்குத் தருகிறது.

திராவிட இயக்கப் பற்றுடன் சமூகநீதியில் அக்கறை கொண்ட பகுத்தறிவாளர் – தமிழ்ப் பற்றுடன் தமிழியக்கம் நடத்துபவர். வி.அய்.டி. வேந்தர் அவர்களுக்கு நமது வாழ்த்து களையும், பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

 

(கி.வீரமணி)

தலைவர், திராவிடர் கழகம்

 

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *