வேலூர் மாவட்ட ப.க. சார்பில் “மந்திரமா? தந்திரமா?” பகுத்தறிவு நிகழ்ச்சி

viduthalai
1 Min Read

வேலூர், மே 12– வேலூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழகம் சார்பில்  பள்ளி மாணவர்களுக்கு “மந்திரமா? தந்திரமா?” பகுத்தறிவு விழிப்புணர்வு கலை நிகழ்ச்சி குடியேற்றம் புவனேசுவரிப் பேட்டை பெரியார் அரங்கில் வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் பழ.ஜெகன்பாபு  தலைமையில் 10-05-2025 அன்று நடைபெற்றது. வேலூர் மாவட்ட பகுத் தறிவாளர் கழக துணை தலைவர் பி. தனபால் அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். குடியேற் றம் நகர கழக தலைவர் சி.சாந்தகுமார்  இந்த நிகழ்ச்சியில் புரட்சிப் பாடல்களை பாடினார்.

குடியேற்றம் நகர பகுத் தறிவாளர் கழக தலைவர் ப.ஜீவானந்தம்  நிகழ்ச்சியை ஒருங்கிணைத்தார். வேலூர் மாவட்ட பகுத்தறிவாளர் கழக  செயலாளர் முனைவர் வே.வினாயகமூர்த்தி  தொடக்க  உரையாற்றி னார். பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் இரா.அன்பரசன்  மூட நம்பிக்கை குறித்து மாணவர்களிடையே உரையாற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். வேலூர் மாவட்ட கழக காப்பாளர் வி.சடகோபன்  வாழ்த்துரை வழங்கினார்.

சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்ட  “மந்திரமா? தந்திரமா?” பகுத்தறிவு விழிப்புணர்வு கலை வல்லுநர்  ஈட்டி  கணேசன்” சாய்பாபா போன்ற பித்தலாட்ட சாமியார்கள், லட்டு, செயின், லிங்கம் வர வழைப்பு, அதைப்பார்த்து பக்தர்கள் மயங்கி சரணடைவது வெறுங் கையில் விபூதி தருவது போன்ற சித்து வேலை மோசடியை  செய்துக்காட்டி மாணவர் களுக்கு விளக்கமளித்தார்.”

இந்நிகழ்வில் வேலூர் மாவட்ட மகளிர் பாசறை தலைவர் ச.ரம்யா, மாவட்ட மகளிர் அணி தலைவர் இரா.ராஜகுமாரி, குடியேற்றம் நகர கழக அமைப்பாளர் வி.மோகன் மற்றும்  நூற்றுக்கும் மேற் பட்ட பள்ளி மாணவர்கள், பெற்றோர்கள்

பங்கேற்று சிறப்பித்த னர். இறுதியாக பகுத்தறி வாளர் கழக பற்றாளர் வெ.ர.நபீஸ் அகமத் நன்றி உரையாற்றினார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *