திராவிடர் கழகம் நடத்தும் 46ஆம் ஆண்டு பெரியாரியல் பயிற்சிப் பட்டறை – குற்றாலம்

1 Min Read

திராவிடர் கழக தலைமைக் கழகத்தின் சார்பில் ஆண்டுதோறும் குற்றாலத்தில் நடைபெறும் பெரியாரியல் பயிற்சிப்பட்டறை 2025 ஜூலை 10,11,12,13 (வியாழன், வெள்ளி, சனி, ஞாயிறு) ஆகிய நான்கு நாள்கள் குற்றாலம் ‘வீகேயென்’  மாளிகையில்
46-ஆம் ஆண்டாக மிக சிறப்புடன் நடை பெறவுள்ளது.

திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர்  கி.வீரமணி அவர்கள் மற்றும் பெரியார் பேருரையாளர்கள், பேராசிரியர்கள் பங்கேற்று வகுப்பு எடுக்க உள்ளார்கள்.

15 வயது முதல் 35 வயது வரையிலான பாலின வேறுபாடின்றி மாணவர்கள், இளைஞர்கள் கலந்து கொள்ளலாம். முதலில் முன்பதிவு செய்யும் 100 நபர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்.

விரிவான நிகழ்ச்சி நிரல் விரைவில் விடுதலையில் வெளியிடப்படும்.

முன்பதிவுக்கு
[email protected]
[email protected]

– இரா.ஜெயக்குமார்
மாநில ஒருங்கிணைப்பாளர்
பெரியாரியல் பயிற்சிப் பட்டறை பொறுப்பாளர்
திராவிடர் கழகம், செல்பேசி: 9842598743

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *