திருச்சியில் பெரியார், அண்ணா, கலைஞர் பெயரில் முக்கிய கட்டமைப்புத் திட்டங்கள்

1 Min Read

முதலமைச்சர் உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டு

திருச்சி பஞ்சப்பூரில் 236 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ள பெரியார் ஒருங்கிணைந்த காய்கறி அங்காடிக்கு அடிக்கல் நாட்டி, 128.94 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பேரறிஞர் அண்ணா கனரக சரக்கு வாகன முனையம் மற்றும் 408.36 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டுள்ள முத்தமிழறிஞர் கலைஞர் ஒருங்கிணைந்த பேருந்து முனையம் ஆகியவற்றை நேற்று திறந்து வைத்துள்ளார். ஒவ்வோர் ஊருக்கும், மாநகரங்களுக்கும் என்னென்ன வசதிகள் தேவை என்பதை அறிந்து, வருங்காலத்திற்கும் திட்டமிட்டுச் செயல்படுத்தும் வளர்ச்சி நோக்கிய அரசாக திராவிட மாடல் அரசை வழிநடத்தி வருகிறார் நமது பாராட்டுக்குரிய தமிழ்நாட்டின் முதலமைச்சர் அவர்கள்.

அந்நிகழ்வில் தந்தை பெரியார், அறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் சிலைகளையும் திறந்து வைத்தும் சிறப்பித்துள்ளார்.

திருச்சி மாநகரின் வளர்ச்சியில் முக்கியமான மைல்கல்லாக அமையவிருக்கும் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்தியுள்ள நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கே.என்.நேரு அவர்கள் நமது பாராட்டுக்கு உரியவர். பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, மேயர் மு.அன்பழகன், திருச்சி மத்திய மாவட்ட திமுக செயலாளர் வைரமணி ஆகியோருக்கும் நமது பாராட்டுகள்!

 

தலைவர், திராவிடர் கழகம்

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *