கவிப்பேரரசு வைரமுத்துவின் அன்னையார்

1 Min Read

அங்கம்மாள் மறைவு

கழகத் தலைவர் இரங்கல்

கவிப்பேரரசர் கவிஞர் வைரமுத்து  அவர்களின்  அன்னையார் திருமதி அங்கம்மாள் (வயது 92) அவர்கள்  அவரது சொந்த கிராமத்தில் நேற்று (10.5.2025)  மாலை காலமானார் என்ற துயரச் செய்தி கேட்டு நாம் துயரமுற்றோம்.

எவ்வளவு வயதானாலும் தாயின் அன்பும், அரவணைப்பும், பாசமும் என்றும் துய்த்துக் கொண்டே இருப்பது, கடமை உணர்ந்த பிள்ளைகளுக்கு முக்கியத் தேவை.

அவரது இழப்பு, அக்குடும்பத்திற்கும், குறிப்பாக கவிஞர் அவர்களுக்கு மிகப் பெரிய சோகத்தை ஏற்படுத்தும். இது சொற்களால் வர்ணிக்க,  ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்! என்றாலும் இயற்கையை எண்ணி ஆறுதல் கொள்ள வேண்டும்.

அம்மையாரின் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலையும், கவிஞர் வைரமுத்து, அவர்தம் குடும்பத்தினருக்கு நமது ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

10.5.2025

குறிப்பு: நேற்று 10.5.2025 இரவு 10 மணிக்கு கவிஞர் வைரமுத்து அவர்களை   தொலைபேசியில் அழைத்து அவரிடம் ஆறுதலைத் தெரிவித்தார் கழகத் தலைவர் ஆசிரியர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *