கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உள்பட பல கட்சித் தலைவர்கள் பங்கேற்பு
சென்னை, மே. 11- இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை மெரினா கடற்கரை சாலையில் நேற்று மாலை பேரணி நடைபெற்றது.
‘இந்திய ராணுவம்
வெல்லும்’ பேரணி
காஷ்மீர் மாநிலம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக இந்திய ராணுவம் தக்க பதிலடி கொடுத்தது. இதற்கு எதிர்ப்பாக பாகிஸ்தானின் தாக்குதலை வீரத்துடன் எதிர்கொண்ட இந்திய ராணுவத்தின் வீரத்தையும், தியாகத்தையும், அர்ப்பணிப்பையும் போற்றும் வகையிலும், இந்திய ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் ‘இந்திய ராணுவம் வெல்லும்’ என்ற தலைப்பில் மாபெ ரும் பேரணியானது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று (10.5.2025) மாலை மெரினா கடற்கரை சாலையில் உள்ள காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகத்தில் இருந்து போர் நினைவுச் சின்னம் வரை நடைபெற்றது.
பேரணியில் துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு எம்.பி., அமைச்சர்கள் கே.என்.நேரு, எ.வ.வேலு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சா.சி.சிவசங்கர், கோவி.செழியன், மா.சுப்பிரமணியன், பி.கே. சேகர்பாபு, டி.ஆர்.பி.ராஜா மற்றும் கனிமொழி, தயாநிதிமாறன் உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
அனைத்துக் கட்சித் தலைவர்கள்
இந்தப் பேரணியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன், இந்திய யூனியன் முஸ்லிம் லீக்-மாநில பொதுச்செயலாயர் முகமது அபுபக்கர் உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சித் தலைவர்கள் மற்றும் தமிழ்நாடு அரசு தலைமைச்செயலாளர் முருகானந்தம், காவல்துறை இயக்குநர் சங்கர்ஜிவால் உள்ளிட்ட அரசு அதிகாரிகள், மேயர் பிரியா, வீட்டுவசதி வாரியத் தலைவர் பூச்சி முருகன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தேசியக் கொடிகளை பிடித்தபடி
பேரணியில் மும்மதத் தலை வர்கள், தமிழ்நாட்டில் பணிபுரியும் முப்படை வீரர்கள், என்.சி.சி. மாணவர்கள், தமிழ் நாடு காவல் துறையினர், ஊர் காவல் படையினர், மருத்துவக்கல்லூரி மாணவர்கள், செவிலியர் கல்லூரி மாணவிகள், கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவர்கள், ஓய்வு பெற்ற மேனாள் ராணுவத்தினர், தி.மு.க. மற்றும் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள், தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேரணியில் கலந்து கொண்ட வர்கள் ‘இந்திய ராணுவம் வெல்லும்’ என்று பொறிக்கப்பட்ட வெள்ளை நிற தொப்பியை தலையில் வைத்த படி, அனைவரும் கையில் தேசிய கொடிகளை பிடித்தபடி மிகவும் உற்சாகமாக நடந்து சென்றனர். பேரணியில் சென்றவர் களை சாலையோரம் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் நின்று உற்சாகப்படுத்தினர்.
ராணுவத்திற்கு நன்றி
பேரணியில் பங்கேற்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறும்போது, “தமிழ்நாடு மக்களுக்கும், மற்ற மாநிலங்களுக்கும் வழிகாட்டும் வகையிலும், ராணுவத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையிலும் பேரணியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்து இப்பேரணி நடைபெற்றது. பேரணியில் அமைச்சர்கள், ராணுவ வீரர்கள், காவல்துறையினர் அனைவரும் கலந்து கொண்டு இந்திய ராணுவத்திற்கு நன்றி தெரிவித்துள்ளனர்” என்று தெரிவித்தார்.
பேரணியானது போர் நினைவுச் சின்னம் அருகே வந்தபோது, பஹல் காம் பயங்கரவாத தாக்குதலில் உயிர் இழந்தவர்களின் படங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டவர்கள் மரியாதை செலுத்தினர் பேரணியில் கலந்து கொண்டவர்கள், ‘இந்திய ராணுவத் துடன் துணை நிற்போம்’, ‘பயங் கரவாதத்தை ஒழித்திட இந்திய ராணுவத்துடன் துணை நிற்போம்’ என்பன உள்ளிட்ட பல்வேறு வாசகங்கள் அடங்கிய பதாகைகளை கையில் ஏந்தியபடி நடந்து சென்றனர்.
பல்வேறு வசதிகள்
பேரணியில் கலந்து கொள்பவர் களுக்கு ஏதேனும் மருத்துவ உதவிகள் தேவைப்பட்டால் பயன்படுத்துவதற்காக 10 இடங்களில் மருத்துவ முகாம்கள், 200 இடங்களில் நிழற்கூடாரங்கள், 71 இடங்களில் குடிநீர் தொட்டிகள், 50 இடங்களில் கழிப்பறை வசதிகள், 15 ஆம்புலன்ஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தன. மேலும், பேரணியில் கலந்து கொண்ட மாணவ- மாணவிகள் உள்ளிட்டோருக்கு தண்ணீர் பாட்டில்களும் வழங்கப்பட்டன.
இது தவிர, நடமாடும் கழிப் பறைகள் 10 இடங்களில் 50 இருக்கைகளுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன. மேலும் 6 இடங்களில் பெண்களுக்கான நகரும் கழிப்பிடங்களும் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. தேவையான குடிநீர் வசதிகள், உயிர்காக்கும் மருந்துகள், ஒரு முகாமுக்கு 3000 ஓ.ஆர்.எஸ். கரைசல் பாக்கெட்டுகள் என மொத்தம் 30 ஆயிரம் ஓ.ஆர்.எஸ்.கரைசல் பாக்கெட்டுகள் தயார் நிலையில் வைக்கப் பட்டிருந்தன.
முதலமைச்சர்
மு.க.ஸ்டாலின் வரவேற்பு
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவு வருமாறு:-
இந்தியாவின் ஆயுதப்படை களுடன் தமிழ்நாடு ஒருமைப் பாட்டுடன் அணிவகுத்துச் சென்றது. இந்த போர் நிறுத்த நடவடிக்கை வரவேற்கத்தக்கது; அமைதி நிலைத்திருக்கட்டும். நமது நாட்டு எல்லைகளைக் காக்கும் வீரர்களின் துணிச்சலுக்கு எங்கள் மனமார்ந்த சல்யூட். இவ்வாறு அதில் கூறப்பட் டுள்ளது.