கீரமங்கலம், மே 11– அறந்தாங்கி கழக மாவட்டம் கீர மங்கலத்தில் 8.5.2025 அன்று மாலை 6 மணிக்கு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு, புரட்சிக் கவிஞர் பாரதி தாசன் பிறந்தநாள் விழா எழுச்சியோடு நடைபெற்றது.
மாவட்ட ப.க.செயலாளர் க.வீரையா தலைமை வகித்தார். அறந்தாங்கி கழகத்தலைவர் ஆ.வேலுச்சாமி வரவேற்புரையாற்றினார்.
பொதுக்குழு உறுப் பினர் த.சவுந்தராசன் ப.க.தலைவர் தங்க.கண்ணன், மு.சேகர் ஆகியோர் முன்னிலை வகித்தார்கள். மாவட்ட திராவிடர் கழகத்தலைவர் க.மாரிமுத்து புரட்சிக்கவிஞ ரின் கவிதைகளின் சிறப்பினை விளக்கி தொடக்கவுரையாற்றினார்.
கழக பேச்சாளர் மாங்காடு சுப.மணியரசன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொறுப்பாளர் முத்தமிழ் தமிழ்மாறன், பேரூராட்சி தலைவர் கே.சி.சிவக்குமார், மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குண சேகரன் ஆகியோர் கருத் துரை வழங்கினார்கள்.
நிறைவாக வழக்குரைஞர் பூவை.புலிகேசி தமது உரையில் சுயமரியாதை இயக்கத்தின் சாதனைகளை, அறிவுசான் தந்தைபெரியாரின் கொள்கை வெற்றியினை,
தந்தை பெரியார் உரைகளை கவிதைகளாக வடித்துத் தந்த புரட்சிக் கவிஞரின் பெருமையினை,
தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பேருழைப்பால் உலகம் பெரியார் மயம் ஆகிவ ருவதை விளக்கி சிறப்பு ரையாற்றினார்.
இறுதியில் மந்திரமா- தந்திரமா நிகழ்ச்சியாளர் சோம.நீலகண்டன் நன்றியு ரையுடன் விழா நிறைவு பெற்றது.