இந்திய இராணுவத்திற்கு துணை நிற்கும் பேரணி

1 Min Read

தமிழ்நாடு

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் இந்திய இராணுவத்திற்கு துணை நிற்கும் பேரணி, சென்னையிலுள்ள காவல் துறை  தலைமை இயக்குநர் அலுவலகத்திலிருந்து காமராசர் சாலையில் உள்ள போர் நினைவுச்சின்னம் வரை நடைபெற்றது. இப்பேரணியில்,   திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி, மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின்  தலைவர் செல்வபெருந்தகை, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா. முத்தரசன்,  நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி,  துணை முதலமைச்சர்  உதயநிதி ஸ்டாலின்,  நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதிமாறன், அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசியல் கட்சித் தலைவர்கள், தலைமைச் செயலாளர் உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள், காவல்துறை தலைமை இயக்குநர் உள்ளிட்ட காவல் துறை உயர் அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள், அனைத்து மத தலைவர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர். (சென்னை, 10.5.2025)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *