பாகிஸ்தானுக்கு மருந்து ஏற்றுமதி நிறுத்தம்

Viduthalai
1 Min Read

சென்னை, மே 10 போர்ப் பதற்றத்தைத் தொடா்ந்து தமிழ்நாட்டிலிருந்து பாகிஸ் தானுக்கு மருந்து ஏற்றுமதி நடவடிக்கைகள் முழுமையாக நிறுத்தப்பட்டன.
உயிர் காக்கும் முக்கிய மருந்துகளுக்கான மூலப்பொருள்கள் எதுவும் இனி தமிழ் நாட்டிலிருந்து அங்கு அனுப்பப்பட மாட்டாது என்று மாநில மருந்து உற்பத்தியாளா்கள் திட்டவட்டமாகத் தெரிவித்தனா்.இதன் காரணமாக ரூ.100 கோடி வரை தங்களுக்கு இழப்பு ஏற்பட்டாலும், நாட்டின் நலனைக் கருத்தில்கொண்டு இந்த முடிவை எடுத் துள்ளதாக அவா்கள் கூறினா்.
உச்சகட்ட போர் சூழலைத் தொடா்ந்து இந்தியாவிலிருந்து பாகிஸ்தான் பெற்று வரும் அனைத்து வகையான பலன்களையும், சலுகைகளையும் தடை செய்ய ஒன்றிய அரசு முடிவு செய்தது. அதன்படி மருந்து ஏற்றுமதியை நிறுத்துமாறும் உத்தரவிடப்பட்டது. அதை ஏற்று தமிழ்நாடு மருந்து உற்பத்தியாளா் சங்கத்தினா் ஏற்றுமதி நடவடிக்கைகளை நிறுத்தினா்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *