முடிந்து வீடு திரும்பினார்
சென்னை, மே 10– முதுபெரும் அரசியல் தலைர் இரா.நல்லகண்ணு (100), வீட்டில் தவறி விழுந்து காயமடைந்தார். இதையடுத்து, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.
சுதந்திரப் போராட்ட வீரரும், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மூத்த தலைவருமான நல்லகண்ணு வயது மூப்பு காரணமாக நந்தனத்தில் உள்ள வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். இந்நிலையில் 8.5.2025 அன்று நள்ளிரவில் கழிப்பறை செல்ல எழுந்தபோது அவர் நிலை தடுமாறி கீழே விழுந்ததாகத் தெரிகிறது. கட்டிலிலிருந்த இரும்புத் தகடு மீது விழுந்ததால் அவரது காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அவர், ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
மருத்துவமனை முதல்வர் டாக்டர் சாந்தாராமன் தலைமையிலான மருத்துவக் குழுவினர் அவருக்கு சிகிச்சையளித்தனர். காதில் வெட்டுக் காயம் ஏற்பட்டதால் அதற்கு தையல் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதில் அவருக்கு அச்சப்படும் வகையில் எந்த பாதிப்பும் இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, நேற்று (9.5.2025) மதியம் அவர் வீடு திரும்பினார். தற்போது நல்லகண்ணு நலமுடன் இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.