ஆய்வு அறிக்கையை (State Level Achievement Survey) வழங்கினார்கள்

0 Min Read

தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் அவர்களை இன்று (10.5.2025) தலைமைச் செயலகத்தில், மாநில திட்டக்குழுவின் துணைத்தலைவரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் மற்றும் செயல் துணைத்தலைவர் முனைவர் ஜெ.ஜெயரஞ்சன் ஆகியோர் சந்தித்து, மாநில திட்டக்குழுவினால் தயாரிக்கப்பட்ட கற்றலில் இருக்கும் இடைவெளிகளைக் கண்டறிவது மற்றும் மாநில அளவிலான அடைவு ஆய்வு அறிக்கையை (State Level Achievement Survey) வழங்கினார்கள். இந்நிகழ்வின்போது. பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, தலைமைச் செயலாளர் நா. முருகானந்தம், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் டாக்டர். பி. சந்திரமோகன், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்ட இயக்குநர்
மரு.எம்.ஆர்த்தி, ஆகியோர் உடனிருந்தனர்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *